Tuesday, July 11, 2006

மரணம் பற்றிய என் கோர்வையில்லா சிந்தனைகள்...

தேன் கூடு போட்டிக்காகாக என்னுடைய இன்னுமொரு கிறுக்கல்...

தினமும் ஆயிரம் பேர் சாகறான் ஆனாலும் சாவுங்கறதை சாதாரண விசயமா ஏன் எடுத்துக்க முடியல? பொறந்த குழந்தைல இருந்து கிழவன், கிழவி வரைக்கும் எல்லோரும் செத்துட்டுதான் இருக்காங்க. இருந்தாலும் எதோ ஆக்ஸ்டெண்டு நிலநடுக்கம் இத்தனை பேரு செத்தாங்க அத்தனை பேரு செத்தாங்க அப்படின்னாலே ஏன் திக்குன்னு ஆயிடுது? நான் நினைக்கிறேன் இப்படி எதாவது சாவு செய்தி பார்த்தாலே நமக்கும் சங்கு இன்னும் கொஞ்ச நாளல் ஊதீடுவாங்கன்னு ஒரு பயம் மனசுக்குள்ள வந்துடுதுன்னு நினைக்கிறேன் அதான்.

ஆமாமா அதனால்தான் இருக்கணும். எல்லோருக்கும் சாவுன்னா ஒரு பயம்தான்ல? இந்த சாவை பொறுத்த வரை ஒரு பிரச்சனை என்னான்னா இது எப்படி இருக்கும்னே யாருக்கு தெரியாது. இந்த கடவுள கூட நான் கண்டேன்னு சொல்றாங்க இந்த சாவை கண்டவங்கன்னு ஒருத்தனுமே இல்லையே? யாராவது ஒருத்தர் செத்துப் போயிட்டு வந்து சாவுன்னா இது இது மாதிரிதாம்பா ஒண்ணும் பிரச்சனையில்லை இப்படி இப்படிதான் இதுக்கப்புறம்ன்னு சொல்லிட்டாங்கன்னா சாவு பத்தி இவ்வளவு பயம் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா அதுதான் முடியாதுல்ல.

இந்த சாவுல மனுஷனுக்கு இருக்கிற சோகம் என்னான்னா அவன் செத்துப் போனவனை அவன் சாகற வரைக்கும் பிரிஞ்சறான் அதுதான். என்னதான் மனசை சமாதானப் படுத்திகிட்டாலும் செத்துத்டாங்கன்னா தொட முடியாது, பேச முடியாது, கூட சேந்து சிரிக்க முடியாது, தோள்ல சாஞ்சு அழுக முடியாதுங்கிற போது துக்கம் நெஞ்சை லேசா அடைக்கதான் செய்யுது.ஆனா இப்படி எல்லாம் நினைக்கிற மனுஷன் வாழும் போது அவன் நினைக்கறப்ப போய் இதெல்லாம் செய்யறானா? வாழும் போது தொடக் கூடிய தொலைவுல இல்லாம, போனுல மட்டும் பேசற, சேந்து சிரிக்க கூட முடியாம இருக்கிற மனுஷன்களுக்கு சாவால மட்டும் என்ன வித்தியாசம் வந்துடப் போகுது? அவங்களுக்கு செத்தவங்க இப்போ சாகல எப்போ தூரம் போனாங்களோ அப்பவே அவங்க செத்துடறாங்க.

நான் மட்டுமா சொல்றேன் எத்தனை பேரு சொல்லறாங்க உன்னோட ஒவ்வொரு நிமிஷத்தையும் நீ விரும்பும் மனிதர்களோடு சேர்ந்து கொண்டாடு நொடிப் பொழுதுல அந்த நொடி நேரம் கிடைக்காமல் போய் விடலாமுன்னு? மனுஷனுக்கு அதெல்லாம் புரிஞ்சு உபயோகப்படுற நேரத்துல புரிஞ்சுக்க மாட்டான். புரிஞ்சும் உபயோகம் இல்லாத நேரத்துல தான் புரியும் அவனுக்கு.

இந்த ரத்தத்துல கூட குரூப் வைச்சு மனுஷனைப் பிரிச்சடறாங்க ஆனால் சாவுல பிரிக்க முடியுதா? ஆனாலும் மனுஷன் இதை புரிஞ்சுக்கறானா? ஹீம்... எல்லாரும் செத்துதான் போகப் போறாங்க அதுல ஒண்ணும் மாத்தமில்லை ஆனால் வாழுறவரைக்கும் எப்படி வாழ்ந்தாங்கறதுதான் முக்கியம் இதை யாரு சொன்னாங்களோ தெரியல ஆனா சொன்னவங்க நம்மள மாதிரி ஒரு புத்திசாலியாத்தான் இருந்திருக்கணும்( நினைக்கறப்ப உனக்கே சிரிப்பு வருதே இது தேவையா? ) இந்த சொல்லுல பல குழப்பம் இருந்தாலும் மத்தவங்க உடலளவிலும் மனசளவிலும் கஷ்டப் படுத்தாம இருக்குறான்தான் அவனோட வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தான்னு சொல்லலாம்.

மனுஷன் வாழ்வு பூமி சூரியனை அறுபது தடவை சுத்தி வரதுக்குள்ள முடிஞ்சுடுற ஒண்ணு பூமி நம்ம சூரியனை எத்தனை தடவை சுத்தி வருது வரப் போகுது. இதுல அவனவனோட கொள்கை மனுசன் இருக்கற வரைக்கும் இருக்கப் போறது இதுக்கு எதுக்கு பிரச்சனை? மனுஷனைத் தாண்டி பூமி இருக்கப் போகுது. அந்த பூமியைத் தாண்டியும் அண்ட வெளி இருக்கப் போகுது. இதையெல்லாம் பாக்குறப்ப சுண்டைக்காய் மனுஷன் என்னா ஆட்டம் போடுறான்? அதாவது எந்த ஒரு மனுஷனுக்கும் இனிமையா வாழறதுதான் புடிக்கும் ஆனா அவன் அடுத்தவனை இனிமையா வாழ விடாதவரைக்கும் அவனாலயும் இனிமையா வாழவே முடியாது. எதாவது ஒரு சந்தர்ப்பத்துல யாராவது ஒருத்தர் மன்னிக்கலேன்னா இல்லை விட்டுக் கொடுக்கலேன்னா அந்தப் பிரச்சனை என்னைக்குமே ஓயாது. மதத்திலிருந்து எல்லா பிரச்சனையும் இது போலத்தான்.

சாவைப் பத்தி யோசிச்சா தத்துவம் எல்லாம் வருது ஆமாமா சாவில்லாட்டி தத்துவம் எல்லாம் எங்க இருந்திருக்கப் போகுது அதனால சாவை பத்தி யோசிச்சாலே தத்துவம் வர்றதுல ஆச்சர்யமில்லை.

ஒவ்வொரு மனுஷனும் சாகிற வரைக்கும் சந்தோசமா வாழணும் ஆனா உண்மையான சந்தோஷம் எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும். உண்மையான அன்பு செலுத்தறப்ப நெகிழ்ச்சியில கிடைக்கிற சந்தோஷம்தான் என்னைப் பொறுத்த வரைக்கும் நமக்கு கிடைக்கற உண்மையான சந்தோசம். உண்மையில் நம்மோட அனைத்து புலன்களும் உணரக்கூடிய சந்தோசம் அன்பில்தான் கிடைக்கிறது. அந்த அன்பை நாம நினைக்கும் சமயத்தில எல்லாம் நாம சாகிற வரைக்கும் வெளிப்படுத்த முடிஞ்சுதுன்னா மனுஷன் செத்துப் போறப்ப நிம்மதியா போய்ச் சேரலாம்.

5 comments:

')) said...

செந்தில் குமரன்,

"தேன் கூடு போட்டிக்காகாக என்னுடைய இன்னுமொரு கிறுக்கல்..."

இது கிறுக்கல் இல்லிங்க மனசுக்குள்ள தோணும் விஷயம்தான் எல்லாருக்கும் வரக்கூடியதுதான்.

நல்லதாங்க இருக்கு

வாழ்த்துக்கள்

அன்புடன்
தம்பி

')) said...

நன்றி தம்பி...

')) said...

குமரன்,

நல்லா இருக்குங்க..

')) said...

நன்றி முத்து அவர்களே....

')) said...

நல்லாருக்கு குமரன்,
நானும் என் எண்ணங்களை எழுதியிருக்கேன்.
படிச்சிட்டு சொல்லுங்க

http://ezuthovian.blogspot.com/2006/07/blog-post_11.html