Wednesday, July 26, 2006

அறிவியல் ஆன்மீகம் அகங்காரம் - 1

Bubble vs Bang எதோ ஹாலிவுட் திரைப்படத் தலைப்பு போன்று இருந்தாலும், இன்று காஸ்மாலஜி(Cosmology) என்னும் துறையில் இன்று பல மில்லியன் வருடக் கேள்வி இதுதான்.

காஸ்மாலஜி என்பது நம்முடைய பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யும் துறையாகும். ஐன்ஸ்டீன், நீயூட்டன், ஹாகிங்ஸ் போன்ற அறிவியல் துறையில் மிக புகழ் பெற்று இருக்கும் அனைவருமே இந்த துறையில் ஆராய்ச்சி செய்தே புகழ் பெற்றார்கள்.

இது ஆன்மீகத்துடனும் மிகவும் நெருக்கமான ஒரு துறையாக நாம் கருதலாம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? போன்ற கேள்விகளுக்கு நாம் இது நாள் வரையிலும் ஏன் இன்று கூட ஆன்மீகத்தையே நாடியுள்ளோம்.

இது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை அறியும் தெரியும் சமயம் நாம் நம்முடைய ஆன்மீகச் சிந்தனைகளை நம்முடைய நம்பிக்கைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது(அப்பாடி தலைப்பின் ஒரு பகுதியை விளக்கியாச்சு இன்னொரு பகுதியையும் விளக்கணும்.)

அகங்காரம் வடமொழி சொல் மாதிரி இருக்கு(தெரியவில்லை குமரனிடம் கேட்க வேண்டும்) வட மொழி தமிழ் மொழி எதுவாக இருந்தாலும் இது ஒரு உலகப் பொது உணர்வு. இது அவரவரின் மத சம்பந்தமான விஷயங்களில் தலை தூக்கி இருக்கும். அசுரனின் உலக பயங்கரவாதி இஸ்ரேல் பதிவைப் பார்த்த பிறகு இது உண்மை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

இந்தத் துறையின் கண்டுபிடிப்புகள் இந்த அகங்காரத்தை முழுவதுமாக அகற்றிவிட வேண்டும் ஏனென்றால் In the grand scheme of things in the universe Humans are nothing.ஆனால் அது சாத்தியமில்லை என்று எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய நம்பிக்கைகளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிப்பது அவனுடைய நம்பிக்கைகள் தவறுகளின் அடிப்படையில் உருவானது என்று தெரிவதால் நின்று விடப் போகிறதா என்ன?

Cosmology என்னும் இத் துறையில் இன்று நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை Hubble என்பவரால் 1929ம் கண்டுபிடிக்கப் பட்ட ஒன்றின் அடிப்படையிலேயே நடை பெறுகிறது.

இவரின் கண்டுபிடிப்பே ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீனுக்கே விளக்கியது;-).

இவரின் கண்டுபிடிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன் அது வரை இந்த துறையில் நடந்தது என்னென்ன என்று காணலாம். இந்த துறையின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு எது என்று நாம் அறிய முற்பட்டால் அது காப்பர்னிக்கஸ் இந்த உலகை உருண்டை என்று கண்டு பிடித்தைத் தான் சொல்ல வேண்டும். அது வரை இருந்து வந்த நம்பிக்கையான தட்டை உலகம் என்ற நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் இருந்த கண்டுபிடிப்பாகும் அது.

பின் நீயூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததை சொல்லலாம். புவியீர்ப்பு சக்தி தான் என்பது நாம் இந்த பூமியின் பகுதியில் ஒட்டிக் கொண்டு இருக்க வைக்கிறது. புவியீர்ப்பு சக்திதான் இந்த சந்திரன் பூமியை சுற்றி வரச் செய்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வரச் செய்கிறது. இது அனைத்தும் தான் ஐன்ஸ்டினின் சார்பு நிலை கண்டுபிடிப்பு வரும் வரை இந்தத் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக கருதப்பட்டது.

ஐன்ஸ்டினுக்கு ஹூபில் எப்படி சார்பு நிலை தத்துவத்தை விளக்கினார். அந்தக் கண்டுபிடிப்பு எப்படி மத நம்பிக்கைகளை மாற்றும் விதமாக உள்ளது மற்றும் மனிதனின் அகங்காரம் குறித்து அடுத்த பதிவில்.

3 comments:

')) said...

நன்றி எழுத்துப் பிழை அவர்களே மாற்றி விட்டேன் இந்த ஒற்றுதான் என்னோட எப்பவுமே ஒட்டாது அதையும் சொன்னீங்கன்னா திருத்திக்கறேன்.

')) said...

அடுத்தப் பதிவு எப்போது வரும் ?
:)

')) said...

நீங்க கேட்க கேட்க எழுதிகிட்டே இருக்கேன்.