Wednesday, August 30, 2006

Are spiritual masters schizophrenic சிந்தனைகள்

விவாதம் மிக நன்றாக சென்று கொண்டிருந்தது. அதனால் ஊடால் புகுந்து என்னுடைய கருத்தையும் கொஞ்சம் சொல்லாமுன்னு அடிச்சேன் அதை இங்க பதிவா இட்டிருக்கேன்.

இந்த விஷயத்தில பார்த்தீர்களானால் ராம கிருஷ்ண பரமஹம்சர் இருந்த கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு மனநிலை சரி இல்லை என்று வைத்துக் கொள்வோம் உடனே என்ன சொல்வார்கள் பேய் பிடித்து விட்டது என்று உடனே பூசாரியிடம் சென்று வேப்பிலை அடித்து அமர்களப் படுத்தி விடுவார்கள்.

மேலும் இந்த கால கட்டம் என்பது அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்த காலம் எல்லாமே Deity தான். சூரியன் முதற் கொண்டு அனைத்தயுமே மக்கள் கடவுளாக வழி பட்டு வந்த காலம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் அதுவும் ஒரு பெரிய நட்சத்திரம் இல்லை மத்திய சைஸ் நட்சத்திரம் என்று தெரிந்திருக்கவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் மக்கள் தங்களால் விளக்க முடியாத அனைத்து விஷயங்களுடனும் ஒன்று பயத்துடனோ இல்லை மரியாதையுடனோ பார்த்து வந்த கால கட்டம் அது.

இது போன்ற சூழ்நிலையில் ராம கிருஷ்ண பரமஹம்ஷர் schizophrenic ஆக இருந்து அதனை மக்கள் பேரானந்தம் என்று எடுத்துக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருந்திருக்கிறது.

ஆனால் நம்மால் அதனை உறுதி படுத்தவோ இல்லை இல்லை என்று மறுக்கவோ இயலாது. அப்படி உறுதி செய்வதும் தவறாகி விடும், மறுப்பதும் தவறாகி விடும்.

இங்குதான் ம்யூஸ் அவர்களின் இந்தக் கருத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

///
இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை.
///

Muse has put it beautifully here.எனக்கும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு கடவுளை நம்புவதன் மூலம், ராம கிருஷ்ண பரமஹம்சர் பேரானந்த நிலையை அடைந்தார் என நம்புவதன் மூலம் ஒருவனுக்கு மன தைரியம், நம்பிக்கை போன்ற பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் கிடைக்கிறது என்றால் we shouldnt have discussed this at all.

ஆனால் பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை.

மதங்களால் நன்மைகள் மட்டுமே இல்லை அதனால் பல பிரச்சனைகளும் வருகின்றன. (என்னைப் பொறுத்த வரை மதங்கள் தான் மனித குலத்துக்கு மிகப் பெரிய பிரச்சனை என்னுடன் பலர் வேறுபடுவர் மேலும் இது இங்கு விவாதிக்கப் படவில்லை ஆனால் மதங்களால் மனிதர்களுக்கு தொல்லைகள் உண்டு என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்).

மேலும்

டாவின்ஸி கோட் நாவலில் ஒரு வரி வரும். we worship the gods of our fathers. என்னடா கடவுள் அன்றைக்கும் ஒன்றுதான் இன்றைக்கும் ஒன்றுதான் ஆகவே என்ன பெரிய ஸ்டேட்மெண்ட் என்று நினைகாதீர்கள். நாம் செய்வது நம் fore-fathers கடவுளை என்றால் அவர்கள் தவறாக எதையோ கடவுள் என்று நினைத்து தவறாக செய்து workship கொண்டிருந்தால்?

இது போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த விவாதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் எனக்கு தோன்றுகிறது.

உங்களின் முக்கியமான கேள்விக்கே நான் வரவில்லை என்று நினைக்கிறேன் அதற்குள் என்ன இவ்வளவு பெரிய பதில் என்று எண்ண வேண்டாம். உங்களின் கேள்விக்கு பதிலை அளிக்கும் விதமாக என்னுள் இருக்கும் ஆன்மீகம் குறித்த சிந்தனைகளை அப்படியே வெளிப்படுத்தியும் உள்ளேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கு செல்கிறேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கான விஷயத்திற்கு வந்து விட்டேன்.

அதாவது இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் அந்த கால கட்டத்தில் வாழ்ந்த சிலருடைய கருத்துக்களை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ம்யூஸ் அவர்கள் விவேகானந்தரே ராம கிருஷ்ண பரமஹம்சரை பைத்தியமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு காலகட்டத்தில் கருதினார் என்று கூறியுள்ளார், பின் அவருடைய கருத்துக்களை நம்பி அவருடைய கொள்கைகளைப் பின்பற்றினார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் விவேகானந்தரினால் மட்டுமே Influence ஆகி ஒரு முடிவுக்கு வருவதும் தவறாகும்.

மேலும் தெ.கா. அவர்களின் கருத்துக்களையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும் எந்த அடிப்படையில் நாம் ஒருவரை மனநிலை சரியில்லாதவர், மனநிலை சரியுள்ளவர் என்று பிரிக்க முடியும்? எதோ ஒரு படத்தில் வரும் வசனம் போலத்தான் சென்று விடும் அவன் பணப் பைத்தியம், அவன் பெண் பைத்தியம் என்று எல்லோருமே ஒரு வகைப் பைத்தியம்தான்.

இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது மிக மிக குழப்பமாகத்தான் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் conclusion என்பது ஒவ்வொரு மனிதர்களிடமும் விட்டு விடுவது தான் சரி என்று தோன்றுகிறது கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லையென்றால் கல் என்பது போல. ஆனால் இது போன்றும் இருக்கலாம் என்ற மாற்று சிந்தனைகளையும் கண்டிப்பாக போதனை செய்ய வேண்டும். ராமர் என்பவர் ஒருவருடைய கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார், அவர் உண்மையல்ல என்று எல்லோரும் நம்பாவிட்டாலும் அந்த மாற்று சிந்தனை போதிக்கப் பட்டிருந்தால் நமக்கு சகிப்புத் தன்மை என்பது அதிகரித்திருக்கலாம் என்று நினைப்பதுண்டு அது போல தான் இந்த விஷயமும்.

Thursday, August 24, 2006

முதல் கதை முயற்சி

தாவணி கட்டிகிட்டு வந்த அந்த பெண்ணை ஏர்போர்ட்டில் பார்த்து 'தாவணி போட்ட பொண்ணா? ஆபீஸ், காலேஜ் மாதிரி இங்கயும் முழிச்சுகிட்டே கனவு காண ஆரம்பிச்சிட்டேனா? நம்ம வாழ்க்கையில திரும்பவும் தாவணி போட்ட பொண்ணை அதுவும் தாவணி போட்ட சிட்டிப் பொண்ணை அதுவும் தாவணி போட்டு சூட் ஆகிற சிட்டிப் பொண்ணை பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலயே டேய் நீ வாழ்க்கையில் எல்லாத்தையும் பாத்துட்டடா' இப்படி நினைச்சுட்டு இருக்கும் போதே மறுபடியும் டென்ஷன் ஆரம்பிச்சுடுச்சு.

'ஏண்டா மொத மொதல்ல பிளைட்டைப் பிடிச்சு பாரின் போற அந்த நேரத்தில என்னடா வாழ்க்கையில் எல்லாம் பாத்துட்டேன் வைச்சுட்டேன்னு? ஏற்கனவே வயிறு கலங்கிகிட்டு இருக்கு இதில இப்படி எல்லாம் யோசனை வேற. இந்த விசா பிராப்ளம் வந்து டீம் இல்லாம தனியா ஒரு பிளைட்டுல வந்து மாட்டீட்டேனே? டீம்ல கூட போயிருந்தாவாவது கடலை போடறதுக்கு ஒரு பொண்ணாவது இருந்தது. நீ கொஞ்ச நேரம் நான் கொஞ்ச நேரமுன்னு மாத்தி மாத்தி கடலை போட்டிட்டு இருந்தா? பிளைட்டுல என்ன ராக்கெட்டுலயே போனாக் கூட வித்தியாசம் தெரியாது.'

'ஆஹா செக்கிங் கூப்புட்டாங்க என்னய கூட செக்கிங்க் பண்ணுறாங்கன்னு நினைச்சா சிரிப்பா தான் இருக்கு? பால் வடியுற மூஞ்சின்னு சொல்லுற எங்க அம்மா, பலப் பல பிகருங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்து இவங்ககிட்ட காட்டணும் அப்பாடி ஒரு வழியா முடிஞ்சுது. என்ன இது? ஏரோபிளேனுக்குன்னு டிக்கெட் வாங்கீட்டு பஸ்ல ஏத்தறாங்க என்ன நடக்குது இங்க? யாரையாவது கேக்கலாமா? வேண்டாம் வேண்டாம் நாம பாட்டுக்கு பிளைட்ல போகப் போறோமுன்னு ஜீன்ஸ் ஜெர்கின்னு ஒரு ரேஞ்சா வந்திருக்கறோம் கேள்வியைக் கேட்டு அசிங்கபடக் கூடாது எல்லாம் தெரிஞ்சா மாதிரி அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கிடுவோம்.'

'என்னா பஸ் இது உட்கார இடம் கூட இல்லாம? நின்னுகிட்டு போக வேண்டியதா இருக்கு கம்பெனில அமெரிக்கா அனுப்புறோமுன்னு எங்கயா அனுப்புச்சீங்க. ஓ பிளைட்டு பக்கத்தில கொண்டு போய் நிறுத்தீட்டாங்க? இதுக்குதான் பஸ்ஸா? என்னமோ போ எல்லாமே தெரிஞ்சா மாதிரி எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது?'

'சரி சரி மேல ஏறியாச்சு. கொஞ்ச நேரமா கொஞ்சம் கம்மியாகி இருந்த டென்ஷன் இப்போ உச்சதுக்கு வந்துடுச்சே? அஹா பொம்பள புள்ளங்க கிட்ட பந்தா விடணும்கறதுக்காக சாமி உன்னைப் பத்தி கண்டதையும் பேசி இருக்கேன் அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதப்பா என்னை முன்னாடி காப்பாத்தின மாதிரி இப்பவும் காப்பாத்தீடு சாமி.'

'சரி சீட் பெல்ட் போடச் சொல்லுறாங்க இந்த டென்ஷன்ல கை எல்லாம் நடுங்கறதுல ஒண்ணுமே முடியலியே என்ன பண்ணறது. ஆஹா பக்கத்தில் இருக்கறவர் உதவி செய்யறாரு. முத முதல்ல பிளைட்டுல வர்றீங்களா கேக்கறார் ஆமா சொல்லுறேன் கவலைப் படாதீங்க எல்லாம் ஓகேவா இருக்கும்ன்னு சொல்லறாரு. பரவாயில்லை நல்ல மனுஷனா இருக்கறாரு. அவரும் முத தடவை போகும் போது யாராவது இப்படி சொல்லியிருப்பாக போல.'

'சரி பிளைட்டு கிளம்புதே பரவாயில்லை ஒண்ணும் தெரியல ஆஹா என்ன இது வேகமாப் போகுது மேலப் போக போக இந்த ஆட்டம் ஆடுது. சாமி என்னைக் காப்பாத்து சாமி இனிமே உன்னைப் பத்தி தப்பாவே பேச மாட்டேன் எம்புட்டு அழகான பிகரா இருந்தாலும் பந்தா விடறதுக்காக ஐடியல் வோர்க்சிப் மட்டம் மக்கள் மூடத்தனமா இருக்காங்கன்னு பேச மாட்டேன் ஆத்தா மாரியாத்தா என்னைக் காப்பாத்தாத்தா. முருகா என்னை காப்பாத்து. ஆஹா இப்போ மறுபடியும் பிளைட் ஒழுங்கா சீராடுச்சே எல்லா சாமியும் என்னைக் காப்பாத்தீட்டீங்களா?'

'சரி சரி என்ன இது பிளைட் ரொம்ப நேரமா போயிட்டு இருக்கு என்ன பண்ணறது. இதில பிஸினஸ் கிளாஸுன்னா ரொம்ப வசதியா இருக்குமாமே? எல்லா சவுகரியமும் இருக்குமாமாம் நிறைய சாப்பிட எல்லாம் தருவாங்களாமே? இந்த கம்பெனிக்கு என்ன குறைச்சல் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க? எங்க பீ.எம். ஒரு வேலையும் செய்யறதில்லை சும்மா ஒக்காந்து ஷேர் மார்கெட்டையும், எக்ஸல் ஷீட்டையும் வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கான் அவனுக்கு எல்லாம் பிஸினஸ் கிளாஸ் என்னை மாதிரி ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சு கோட் அடிக்கறோம் நமக்கு மட்டும் எகானமி கிளாஸ்? என்ன உலகமடா இது? உழைக்கறவங்களுக்கு மதிப்பே இல்லை.'

ஆஹா என்ன இது மறுபடியும் பிளைட்டு இந்த ஆட்டம் ஆடுது? வயித்தைக் கலக்குதே? நான் பேஸ்து அடிச்சா மாதிரி உட்காந்திருக்கறதைப் பார்த்துட்டு பக்கத்தில இருக்கறவர்தான் ஏர் டர்புளன்ஸ் அப்படித்தான் இருக்குங்கறார். ஆத்தா என்ன இது இந்த ஆட்டம் ஆடுது நம்மூர் ஓட்ட பஸ்ஸும் இப்படிதான் ஆடும் ஆனா இது அந்தரத்தில இல்ல ஆடுது? இனிமே என்னதான் ஆனாலும் பிளைட்டுல மட்டுமே ஏறவே கூடாதுப்பா. என்ன விளையாட்டு இது நான் வரலை திரும்பிப் போகும் போது கப்பல்ல ஏறி போயிக்குறேன் அப்பா இது நமக்கு ஒத்து வராது. சாமி என்னை காப்பாத்து சாமி. ஆஹா மறுபடியும் சரியாயிடுச்சு. நல்ல வேலை டீசண்டா இருக்கட்டுமே சாக்லேட்டுல இருந்து எல்லாமே கம்மியா எடுத்துகிட்டேன். இல்லை எனக்கு வயித்த கலக்கற கலக்குக்கு பிளைட்டு நாறிருக்கும்.

அப்பாடி ஒரு வழியா வந்து இறங்கியாச்சு இப்போதான் நிம்மதி. செக்கிங் மறுபடியும் சிரிப்புதான் வருது என்ன சொல்லறது. இந்த அமெரிக்காவில ஜீன்ஸ் எல்லாரும் லோ ஹிப்புலதான் கட்டுவாங்க போல. அமெரிக்காகாரனுங்க குடுத்து வைச்சவனுங்க. இது என்ன இது என்னைப் பார்க்க டீம்ல இருந்து எல்லாரும். பக்கத்தில தான் இருக்கறதுனால வந்திருப்பாங்க போல. பிளைட் எப்படி இருந்துச்சுன்னு கேக்கற டீம் மேட் ஒருத்தி.

"Fantastic. ஏறுனதும் தெரியல இறங்கினதும் தெரியல." என்று சொல்லி விட்டு டீம் மேட்டிடம் "என்ன அமெரிக்க வந்தும் தாயத்து கயிறுன்னு கைல எல்லாம் கட்டீட்டு இருக்க. This is the land of technology. Grow up"ன்னுட்டு சொல்லிகிட்டே நடக்கிறேன்.

Thursday, August 17, 2006

சுதந்திர தின சிந்தனைகள்

நாடு என்பது என்ன? எல்லைக் கோடுகள் நம்மைப் யாரிடம் இருந்து பிரிக்கிறது? 47க்கு முன் நம் சோதரர் இன்று அவர்களால் தான் நமக்கு மிகப் பெரிய அபாயம். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்?

"தனி ஒரு மனிதனுக்கு உண்வில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று மனித நேயத்தை வழியுறுத்தி முழங்கினானே ஒரு கவிஞன் அவன் கனவு மெய்படும் திசைக்கு எதிர் திசையில் அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்.

தன் குலத்தையே நொடிகளுக்குள் அழிக்கும் திறனை வளர்த்துக் கொண்டவன் மனிதன். இன்று அழிவு என்று வந்தால் அழியப் போவது மனிதர்களுல் ஒரு பகுதியினர் மட்டும் அல்லர், முழு மனித இனமே அழிந்து விடும் சூழ்நிலைதான் நிழவுகிறது.

லெபனானில் நடந்த தாக்குதல்கள் Nuclear Holocast ஆக மாறி விட எத்தனை நேரம் பிடித்து விடும்.

உலகம் எங்கிலும் இந்த நிலை என்றால் நமக்கு தலையிலும் பிரச்சனை வாலிலும் பிரச்சனை.

பாகிஸ்தான் இந்தியா பிரச்சனையினால் இறப்பது தம் தூரத்து ரத்தச் பந்தங்கள் தான் என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்? காஷ்மீர் என்ற சொர்கத்தை இன்னும் நரகமாகவே வைத்திருக்கிறோமே என்று அதனை தீர்க்கப் போகிறோம்? அந்த ஊர் குழந்தைகள் வெடி குண்டுப் சத்தத்திற்கு நடுவில் தூங்காமல் தாலாட்டிற்கு நடுவில் தூங்கும் காலம் வரும்?

இலங்கை என்று இயற்கை எழில் கொஞ்சும் பூமிக்கு விடியல் வரப் போகிறது?

எது மாறினால் இது போன்ற கொடுமைகளில் இருந்து விடிவு கிடைக்கும்?

அரசாங்கமோ மாறுவதாலா? இல்லை நாட்டின் பாலிஸி மாறுவதாலா?

மாற வேண்டியவை அவை அல்ல மனிதனின் மனோபாவம் தான். இனம் மதம் என்று தன்னைத்தானே பிரித்துக் கொண்டிருப்பது மனிதன் தான் ஆகையால் மாறுதல் என்பது அவனிடத்தில் தான் வர வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனை தீர வேண்டுமெனில் மாற வேண்டியது மனிதனை பிடித்திருக்கும் மதம் தான். இலங்கைப் பிரச்சனைகள் தீர இன குறித்த மனிதனின் மனோபாவம் தான் மாற வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள், சிங்களத்தவர்கள் என்ற எண்ணம் போய் அனைவரும் மனிதரே என்ற எண்ணம் தழைத்தோங்கினால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்து விடும்.

ஹிந்து முஸ்லீம் என்ற பாகுபாடுகள் இல்லையெனில் பாகிஸ்தான் உருவாகியே இருக்காது காஷ்மீரும் பிரச்சனைக்குள்ளாகி இருக்காது.

இந்த பாகுபாடுகள் அனைத்தும் தீர்ந்து போக வேண்டுமெனில் அன்பு வழியில் சென்றால்தான் அது முடியும்.

பிரச்சனைக்கு அடிப்படை, அந்த அடிப்படைக்கு அடிப்படை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணியாக மனிதனின் ஈகோ தான் இருக்கும் என் மதம் என் இனம் என் ஜாதி என் மொழி பேசுபவர்கள் என்று நமக்கே நம்மவர் என்னுடையது என்ற ஈகோதான் இது அனைத்திற்குமே காரணம்.

சுஜாதாவின் ஒரு கதை எதுவென்று தெரியவில்லை வருங்காலத்தில் நடக்கும் கதை நிகழ்காலத்தில் இருந்து வருங்காலத்துக்கு கூட்டிச் செல்லப்பட்ட மனிதனின் எண்ணங்களால் எப்படி வருங்காலத்தில் இருக்கும் அனைத்துமே அழிந்து போய் விடக் கூடும் என்பது போன்ற கதை அது.

இன்று நிகழ்காலத்தில் அதுதான் நிகழ்ந்து வருகிறது மனிதனின் ஈகோ அவனுடைய அழிவுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது.

மாற்றம் என்பது சிறிய அளவில் தான் ஆரம்பிக்கும்.

Pay It Forward என்ற படம் ஒன்று அதில் வரும் சிறுவன் ஆரம்பிக்கும் என்ற படம் ஒன்று அதில் வரும் சிறுவன் ஆரம்பிக்கும் Pay It Forward என்ற ஸ்கீம் ஆரம்பிப்பான். அதாவது அந்தச் சிறுவன் இரண்டு பேருக்கு உதவி செய்வான் அதற்கு பலனாக வேறு இருவருக்கு உதவி செய்யச் சொல்லுவான் அது போல அனைவரும் அனைவருக்கும் உதவிக் கொள்ள அந்த நகரமே ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து விடுவதாக காட்டியிருப்பார்கள்.

அது போன்ற டிராமேட்டிக் மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவென்றாலும் நாம் இன்று நம்முடைய துவேஷங்களை அது எவ்வளவு நியாயமான துவேஷமாக இருந்தாலும் ஒழித்து விட்டு அன்பு வழியில் செல்லத் துவங்கினால் மட்டுமே மனித குலம் அடுத்த கால் நூற்றாண்டைத் தாண்டும்.

நம் நாடு என்ற பெருமிதத்துடன் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இந்தியாவின் இறையாண்மைக் கொள்கையான அன்பு வழியில் சென்று நம்முடைய துவேஷங்கள், வெறுப்புகள் அனைத்தையும் மறந்து ஒரு சிறந்த பாரதத்தையும், இந்த பூமியை ஒரு சிறந்த இடமாக்க முயற்சிகள் செய்வோம்.

ஜெய் ஹிந்த்.

Wednesday, August 09, 2006

ஆன்மீகம் அறிவியல் அகங்காரம் - 3

சார்பு நிலைத் தத்துவம் குறித்து மேலும் ஒரு எடுத்துக் காட்டுடன் ஒரு விளக்கம்.

சோமு, ராமு இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று வைத்துக் கொள்வோம். இதில் ராமு ஒரு ராக்கெட்டில் ஏறி 8 ஒளி வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு போகிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணப்படும் தொலைவு அதாவது (3,00,000 *60*60*24*365 கிலோமீட்டர்கள்). இருவரிடமும் ஒரு தொலைநோக்கி இருக்கிறது அந்த தொலை நோக்கியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். அந்த நட்சத்திரத்தையும் பார்க்க முடியும். ராமு ராக்கெட்டில் நொடிக்கு 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் என்று வைத்துக் கொள்வோம். ராமு ராக்கெட்டில் கிளம்பும் சமயம் ஜனவரி 1 2000 என்று வைத்துக் கொள்வோம். ஆகவே இந்த நட்சத்திரத்தை அவன் 10 வருடங்களில் சென்றடைவான்.

இங்கு மேலும் ராமுவிடம் ஒரு கடிகாரம், சோமுவிடம் ஒரு கடிகாரம், அந்த நட்சத்திரத்தில் ஒரு கடிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ராமுவும், சோமுவும் இந்த மூன்று கடிகாரங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க முடியும் என்றும் வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது ராமு, சோமுவிடம் உள்ள கடிகாரம் இரண்டும் ஜனவரி ஒன்று 2000 என்று காண்பிக்கும். நட்சத்திரத்தில் இருக்கும் கடிகாரம் 1 ஜனவரி 1992 என்று காண்பிக்கும் ஏனெனில் அந்த நட்சத்திரத்தில் இருக்கும் ஒளி நம்மை அடைய 8 ஒளி ஆண்டுகள் பிடிப்பதால் 8 வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து தோன்றிய ஒளிதான் நம்மை வந்து அடைந்திருக்கும். ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

சரி ராக்கெட் கிளம்பும் சமயம் என்னவாகும் என்று பார்க்கலாம். ராமுவுக்கும் இது வரை 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்பொழுது 3,00,000 + 2,40,000 = 5,40,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து சேரும். இது ஏன் என்றால் உங்களை நோக்கி ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது அது 80 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது நீங்கள் அதனை நோக்கி 80 கிலோமீட்டர் வேகத்தில் போகிறீர்கள் என்றால் அந்த ரயில் உங்களை நோக்கி 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது அல்லவா அதாவது அதன் வேகம் அதிகரிக்கவில்லை நீங்கள் வேகமாக போவதால் அதன் வேகம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள் இல்லையா?அது போலத்தான் இதுவும். ராமு ஒளியை நோக்கி 2,40,000 வேகத்தில் பயணம் செய்யும் சமயம் அந்த வெளிச்சம் நம்மை அவ்வளவு வேகமாக வந்தடையும்.

நாம் மேலும் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது டைம் ஸ்பேஸ் டைலேஷன்(time-space dilation) பற்றி. அதாவது நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அந்த அளவு நேரம் மெதுவாக செல்ல ஆரம்பிக்கும்.இது கண்டிப்பாக ஒத்துக் கொள்ள கடினமாகத்தான் இருக்கும் இருந்தாலும் நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்றது போல நாம் பயணம் செய்யும் இடைவெளி குறையும். இதனை Space Warp, Time warp என்று சொல்லுவார்கள். இதற்கு time-space dilation formula என்று ஒன்று உண்டு இதனை வைத்து இதனை கணக்கிடுவார்கள். இந்த எடுத்துக்காட்டில் ராமுவுக்கும் 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்வதால் space-time dilation factor 60% ஆக இருக்கும். அதாவது ராமு இப்பொழுது ராமுவிற்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 60% ஆக குறைந்து விடும்.

இது எப்படி சாத்தியம் என்றால் சாத்தியம்தான். இது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்க பட்டுள்ளது. 1970 களில் சில விஞ்ஞானிகள் அடாமிக் கிளாக் எனப்படும் மிக குறைவான நேரத்தை கணக்கிட உதவும் சில கடிகாரங்களை ஒரே நேரத்தைக் காட்டுமாறு synchornize செய்து அதில் சில கடிகாரங்களை பூமியிலும் சில கடிகாரங்களை ஒரு வானவூர்த்தியிலும் எடுத்துச் சென்று சில மணி நேரம் கழித்து வந்த பொழுது வான ஊர்த்தியில் இருந்த கடிகாரங்கள் அனைத்துமே பூமியில் இருந்த கடிகாரங்களை விட சற்று குறைவான நேரத்தில் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.குறைந்திருந்த மணித்துளி பார்முலாவின் படி அமைந்திருந்தது.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ஆகவே இப்பொழுது ராமுவுக்கு தொலைவு 60% ஆகி விட்டதால் ராமு 10 வருடங்களுக்கு பதிலாக 6 வருடங்களிலேயே அந்த நட்சத்திரத்தை அடைந்து விடுவான்.

சரி இப்பொழுது ராமு பாதி தூரத்தை கடந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் இப்பொழுது என்னவாகும்?

இப்பொழுது பூமியில் நேரம் 2005 ஆக இருக்கும் ராமுவின் நேரம் 2003 ஆக இருக்கும்.

இங்கு மேலும் சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

Dopplers effect

அதாவது நம்மை நோக்கி ஒரு வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு ஹாரன் அடிக்கப் படுகிறது அப்பொழுது நம்மை நோக்கி வருவதால் அந்த சத்தத்தின் அலைகள் நம்மை நோக்கி கொண்டு வருகிறது அதனால் அந்த சத்தம் அதிகமாக இருப்பதாக தோன்றும் அந்த வண்டி நம்மை விட்டு செல்லும் சமயம் அதாவது நம்மைக் கடந்து செல்லும் சமயம் அந்த வண்டியின் சத்தம் அது நம்மை விட்டு விலகிச் செல்வதால் அதிகமாக இருக்காது. இது மீண்டும் ஒரு மிகவும் எளிமை படுத்திச் சொல்லப் பட்ட விளக்கம். ஆனால் இதுதான் டாப்ளர் விதி.

அதோடு மட்டும் அல்லாமல் நம்மை வெளிச்சம் வந்து சேர நேரமாகும் ஆகவேதான் ராமு கிளம்பும் முன் நாம் நட்சத்திரத்தின் நேரம் 1992 ஆக இருந்தது.

இதனால் சோமு 2005ல் பூமியில் இருந்து பார்க்கும் சமயம் சோமுவின் நேரம் 2001 ஆகத்தான் இருக்கும். அதாவது 2001ல் சோமு எந்த தூரத்தில் இருந்தானோ அதுதான் சோமுவுக்கு தெரியும்.

இதே தூரத்தில் இருக்கும் ராமுவுக்கு டாப்ளர் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்கும் விதத்தால் நேரம் 2001 ஆகத்தான் தெரியும்.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ராமு நட்சத்திரத்தை அடைந்த சமயம் திரும்பும் சமயம் நேரம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை அடுத்து விளக்க முயற்சி செய்கிறேன்.

Tuesday, August 08, 2006

ரக்ஷா பந்தன்

இன்று ரக்ஷா பந்தன் தங்கையர் தம் அண்ணனுக்கு ராக்கி அணிவிக்கும் நாள். எனக்கு அக்கா தங்கை யாரும் கிடையாது. சொந்த பந்தங்களிலும் யாரும் அக்கா தங்கை என்று கிடையாது. அதனால் சிறு வயது முதலே அக்கா தங்கை வேண்டும் என்ற ஏக்கம் மனதில் உண்டு.

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடம் தான் முழுமையான Emotional Support கிடைக்கும். நண்பர்கள் எவ்வளவுதான் நெருக்கமாக பழகினாலும் ஆணுக்கு துன்பம் வரும் சமயம் நண்பர்கள் அவனுக்கு தேவையான Emotional Support கொடுப்பது கடினம். இது போன்ற சந்தர்பங்களில் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது Freeze ஆகி விடுவார்கள் இல்லை தண்ணி அடிக்க கம்பெனி கொடுப்பார்கள்.ஆனால் பெண்களிடம் ஆணுக்கு தேவையான Emotional Support கண்டிப்பாக கிடைக்கும்.

நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன் தன் அக்காவை ஐடியலைஸ் செய்து, அக்கா வளர்த்து வந்த தம்பிகளை, உற்ற தோழியாக நல்ல நண்பியாக பழகும் அண்ணன் சந்தோசத்துக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் தங்கைகளை. அது போன்ற உறவு எனக்கில்லாதது ஒரு மிகப் பெரிய குறையே.

எனக்கு தெரிந்து இந்தியாவில் கலாச்சாரத்தில் ரக்ஷா பந்தன் ஒன்றுதான் உறவைக் கொண்டாடும் பண்டிகை. மற்ற Fathers day, Mothers day எல்லாமே மேற்கத்திய கலாச்சாரங்கள்தான்.

ஆகவே இன்று இந்த நாளில் தன் அன்பை வெளிப்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இது போன்ற சந்தர்ப்பமே இல்லாத என் போன்றவர்களைப் பாருங்கள் பார்த்து விட்டு அன்பை வெளிப்படுத்தி விடுங்கள்.

இன்று இந்த பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

Monday, August 07, 2006

செம்புலப் பெயல் நீர்

எனக்கு மிகவும் பிடித்த கவி வரிகளை ஒட்டி தேன்கூட்டின் போட்டிக்காக இந்தப் பதிவு.

முதலில் என் கண்கள் கண்டது உன் கண்களை.

என் அன்னையின் மேலுள்ள பூ வாசம் போன்ற உன் வாசம் என்னையடைந்தது பின்புதான்.

வாசம் என்னை அடைவதற்குள் மனதுள் வந்தடைந்து விட்டாய்.

கண்கள் கலந்த சமயத்தில் இருந்து உன் வாசனையை நான் கண்டறிவதற்குள்தான் எத்தனை மாற்றங்கள்.

என்னைச் சுற்றி எல்லாமே குழந்தையின் சிரிப்பைப் போல மாசு மருவில்லாமல் கள்ளம் கபடமற்றதாகி விட்டதே.

நான் கேட்கும் ஓசை அனைத்துமே ராஜாவின் மெல்லிசையைப் போன்றதொரு அற்புதமான சுவரங்களுடன் ஒலிக்கிறதே.

புள்ளியாய் இலக்கில்லாமல் இருந்த வாழ்க்கை ரங்கோலியாய் மாறி வண்ணச் சிதறல்களுடன் கவித்துவமாகி விட்டதே.

மாமலையும் மடுவாவது கடைக் கண் பார்வையால் தான் என்று சொன்னவரின் கல்லறையில் சென்று கடைக்கண் பார்வை தேவையில்லை அவள் கண் என் பார்வையில் பட்டதே போதும் என்று உரக்க சொல்ல தோன்றுகிறது.

வாசம் நாசி தொட்ட கணம் சர்வ நாடியும் நிறைந்தாய்.

இங்கு என்ன நிகழ்கிறது உன் கண்களில் கலங்கி நிற்கிறேனே ஏன்? உன்னை யாரென்றே அறியேன். உன் கண்களை என் கண்கள் அறியும் உன் வாசனை என் நாசி அறியும் இதனைத் தவிர வேறு ஒன்றும் அறியேனே.

போன ஜென்மத்து உறவா? விட்ட குறை தொட்ட குறையா? எதனால் இந்த மாற்றம்? உன் தந்தை இருக்கிறார் இந்த உலகில் என்று என் தந்தை தான் அறிவாரா? இல்லை என் தந்தை இவ்வுலகில் இருக்கிறார் என்று உன் தந்தை அறிவாரா?

இவர்கள் ஒருவர் இருப்பதை ஒருவர் அறியாமல் இருந்தாலும் நீ இருக்கிறாய் என்று நான் கண்டிப்பாக அறிந்தே இருந்தேன். கவிதைகளின் உவமைகளிலும், கதைகளின் வர்ணணைகளிலும், திரை அரங்குகளில் நெஞ்சைத் தொடும் காட்சிகளிலும் உன்னை உணர்ந்திருக்கிறேன். இன்றுதான் அந்த உணர்வுக்கு ஒரு உருவம் கிடைத்திருக்கிறது எனக்கு.

கண்கள் கலந்ததுமே காதலா? நம் குணங்கள் ஒத்துப் போகுமா? நம் விருப்புகள் என்ன வெறுப்புகள் என்ன கண்டதும் காதல் சரியா? உன்னைப் பற்றி என்ன தெரியும் எனக்கு? பெயர் கூடத் தெரியாதே பின் எப்படி இந்த காதல் சரியாகும்?

மழை செம்மண் பூமியை அடையும் சமயம் மழை யோசித்ததா மண்ணின் தன்மைகளைப் பற்றி? எப்பொழுதோ ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த இந்த மண்ணும், நீரும் தற்காலிகமாக பிரிந்து மழையாகி வந்து இன்று கலப்பது போல நம் நெஞ்சங்கள் இங்கு கலக்கின்றது .
1000 வருடங்களாக மாறாதிருக்கும் ஒரே உணர்வு காதல்

ரத்தத்தாலான உறவுமில்லை
முத்தத்திலான உறவுமில்லை
பழக்கத்தாலான நட்புறவில்லை
அன்புடை நெஞ்சம் கலக்கும் இவ்வுறவு
இக்கவி சொல்லும் செம்புலப் பெயல் நீர் போலத்தான்

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே..."