கானல் நீரானது கனவுகள்
தேய் பிறையானது உணர்வுகள்
வாடும் எனது நெஞ்சம்
நிதமும் துளியாய் சாகும்
வாடைக் காற்றில் நித்தம்
தேடும் உந்தன் வாசம்
மோகம் சூழும் நேரம்
கண்ணீர் தானே தழும்பும்
கானச் சிறகு பறவை
காணக் கூட கவிதை
பேதை கொண்ட நெஞ்சம்
கண்டும் கேட்டும் விம்மும்
துன்பம் காலையில் பூபாளம்
இரவு நேரத்தில் தாலாட்டு
துயரத்தில் தோழமை தோள்?
துயரமே தோழமை தோள்
பாலை வனத்தின் பாலையாய்
காய்ந்து உலர்ந்த நெஞ்சத்தில்
துளிர்ந்து பசுமையின் எச்சமாக
மீந்தது உனது நினைவுகளே
Monday, January 04, 2010
Subscribe to:
Posts (Atom)