Friday, September 22, 2006

காதல் ஒரு வார்த்தையில்

கௌதம் போட்டியில் போட்டது கொஞ்சம் டீசன்டா இருக்கறதுனால என் பதிவில் போட்டுகிட்டேன் :-)))).

காதல் ஒரு வார்த்தையில் வருணனை

விவரிக்க
பலவாயிரம் காப்பியங்களால் இயலவில்லை
நூற்றாண்டுகளாய் வார்த்தைகள் போதவில்லை
வார்த்தைகளில் விவரிக்க மொழிகளில்லை
கேள்விக்கு என்னிடம் பதிலுமில்லை
என்னவள் என்றுரைக்க என்னிடமில்லை
காதலில் மிச்சமாய் வேறெதுமில்லை

நினைவுகள்

Wednesday, September 20, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம் - II

மீசை அரும்பிய நாளில் அருகியது
மனதில் தணிக்க இயலாத தாகமொன்று

பகலவன் ஈர்ப்பால் பூமி சுற்றுகிறது
கன்னியர் பால் கொண்ட ஈர்ப்பு
தாகம் தணிப்பதாய் மனதை சுற்றிவிட்டு
தாகத்துக்கு நீருட்டி தாகம் வளர்த்தது

மேகம் காணாத விளைப் பயிர்
கன்னி தலை சாய்க்காத தோள்
இவை இரண்டும் இருந்துதான் பயனென்ன

பயனில்லா தோளும் அடங்கா தாகமும்
கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் சுழன்ற
சமயத்தில் தான் கண்டேன் கன்னியை

மழை வாசத்தில் தோகை விரித்தாடும்
மயிலின் பரவசம் விவரிக்க வார்த்தையேது
மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட
மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது

பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஒட்டப்
பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே

இதயம் ஓய்வில்லாமல் துடித்து அன்றுவரை
பழுதில்லாமல் இயங்கியதும் அவளைக் காணவே

கண்டேன் அவளை கண்டேன் அவளை
களிப்பில் காலம் உறைந்த சமயமது
அப்பொழுது அறியேன் காலம் உறைந்தால்
அதனை சமப்படுத்த விரைந்து ஓடுமென்று
ஓடியது வாழ்க்கை சக்கரத்தில் சுழற்றி

மனிதனின் கண்களுக்கு தெரியும் நீலவானம்
ஒளிச் சிதறல்களால் ஏற்படும் மாயை
அறிந்தும் உணர்ந்து இருக்கிறான் மனிதன்
இருப்பினும் இன்னும் இருக்கிறது ஆகாயம்
இருக்கும் மனிதன் உள்ளவரை மாயையாய்

அவள் உயிரணு பந்தயத்தில் வெல்ல
உந்து சகதி நானல்ல என்றறிந்தேன்
தாகம் தணிக்காத கானல்நீர் என்றுணர்ந்தேன்
இருந்தாலும் இன்னும் இருக்கிறாள் மனதுக்குள்
இருப்பாள் வாழும்வரை ஒருதலை ராகமாய்


முதல்ல ஒரு படைப்பை அனுப்பிச்சேன் அது ரொம்ப நெகடிவா குற்றம் குறைகளை மட்டும் சொல்றா மாதிரி தெரிஞ்சதால இதை எழுதி அனுப்பிச்சேன். நன்றி தமிழ் சங்கம் நான் தமிழில் எழுத வாய்பளித்ததற்கும், நான் அனுப்பியதை திட்டி திரும்ப அனுப்பாமல் இருந்ததற்கும் :-))).

Tuesday, September 19, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

உலகின் எல்லா மூலைகளிலும் பொதுவுடமை
மலிவாய் சுலபமாய் எடுக்கப் படுகிறது
மனிதவுயிர் சகஜமுமாகி விட்டது இந்நிகழ்வுகள்
இலங்கை பாலஸ்தீனம் லெபனான் மும்பை

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறக்கின்றனர் பாலகர் பசியால் விவசாயி
வறுமையால் ஒருவேளை உணவுண்டு வாழ்கிறது
பெரும்பான்மை கோடி குவிக்கிறார்கள் அரிதாரிகள்
அவர்களுக்கே உயிர் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள்

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

துவேஷங்களைப் பரப்பிகிறார் மனிதர்கள் பலர்
துவேஷங்களால் இறக்கிறார் பச்சிளம் பாலகர்
கண்டித்தால் அன்பைப் பாராட்டினால்(கோ.வி.) கோபம்
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்

இன்னுமா இருக்கிறது ஆகாயம்.

ஏ ஆகாயமே
மனிதனின் செயல்களால் கண்ணீர்தான் வடிப்பாயா?
விண்கல்லால் டைனோசர் இனமழித்தது போல்
என்றழிக்கப் போகிறாய் கேடுகெட்ட மனிதரை

தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு
போட்டி நடத்தி தலைப்பு கொடுப்பவர்களுக்கு நன்றி.

இந்தப் பதிவின் தாக்கத்தில் எழுதியது

Sunday, September 17, 2006

ஒரு மாலை இள வெயில் நேரம்

தமிழ் மணம் அறிமுகமான சமயத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன் வரை மும்பையில் இருந்ததால் எந்த ஒரு வலைப் பதிவாளரையும் சந்தித்தது இல்லை. பெங்களூர் வரும் வரை எந்த ஒரு வலைப் பதிவாளருடனும் தொடர்பு கொண்டதும் இல்லை.

மேலும் சிறப்பான எழுத்தாற்றல் இல்லாததாலும், வலை அரசியலில் சார்பு நிலை எடுக்காமல் இருந்ததாலும் அதிகமாக வலைப் பதிவாளர்களுடன் தொடர்பு இருந்ததில்லை.

வலைப் பூக்களில் அரசியல் இருக்கலாம், சண்டைகள் இருக்கலாம் அது எல்லை மீறியும் செல்லலாம் இருப்பினும் திராவிடர், பிராமிணர், ஹிந்து, முஸ்லீம், இது எதிலும் சாராதவர் என்று குழு குழுவாக பிரிந்து செயல் படும் அனைவரையும் இணைப்பது தமிழ் மேல் நம் அனைவருக்கும் இருக்கும் ஈர்ப்புதான்.

என்ன பிரிவினைகள் இருந்தாலும் தமிழ் தாயின் குழந்தைகள் என்று நாமெல்லாம் இணைந்திருப்பதால் அப்படி ஆர்வம் உள்ள அனைவரையும் சந்திக்கும் ஆவல் எனக்குள் இருந்தது.

இது போக வலைப் பதிவுகளில் ஒரு வருடமாக மட்டுமே இருப்பதால் கொஞ்சம் முன்னால் இருந்து இருக்கும் சிலரை சந்தித்து history of blogging தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தேன்.

பெங்களூர் வந்ததில் இருந்து அதற்கு கிடைத்த முதல் வாய்ப்பாக டோண்டு அவர்களின் பெங்களூர் வருகை அமைந்திருந்தது.

பெங்களூர் புதிது என்பதால் எப்படி லால் பார்க் செல்வது என்பதெல்லாம் தெரியாததால் முழித்துக் கொண்டிருந்த எனக்கு சிவ பிரகாசம் அவர்கள் தானும் அந்த வழியாக செல்வதாக கூறியதால் அவரை வீட்டருகே சந்தித்து அவருடன் இணைந்து லால் பார்க் சென்றேன்.

செல்லும் வழியிலேயே டோண்டு அவர்கள் லால் பார்க் வந்து விட்டதாக சிவ பிரகாசம் அவர்களில் கை தொலை பேசிக்கு அழைப்பு வந்தது. ஒரு வழியாக கடைசியாக லால் பார்க் சென்று வண்டியைப் பார்க் செய்த சமயம் சிறிது பதட்டமாகக் கூட இருந்தது.

லால் பார்க் கண்ணாடி வீட்டிற்கு பக்கத்தில் சென்று ஒரு வழியாக கடைசியாக டோண்டு, மியூஸ், மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். அதன் பின் ஹாய் கோபி, மௌள்ஸ், செந்தழல் ரவி அவருடைய நண்பர் மோகன் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

டோண்டு அவர்கள் போட்டோவில் பார்ப்பதை நிறம் கம்மியாக இருந்தார், நிறைய பேசுகிறார். மியூஸ் இவருடைய பின்னூட்டங்கள் சில இடங்களில் மிக புத்திசாலித்தனமாக ஆழமான சிந்தனையுடன் இருக்கும். சில இடங்களில் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் ஆள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கிறார் பிறை வடிவில் ஒரு சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இவரை eccentric ஆக கற்பனை செய்து வைத்திருந்த எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. ஹாய் கோபி அவர்களின் பதிவுகள் எனக்கு பழக்கம் இல்லை ஆனால் மிகவும் நன்றாக பேசுகிறார் jovial டைப் நல்லா அரட்டை அவரோட. ஆனால் எல்லா பேச்சிலர்கள் போலவேதான் இவரும் இருக்கிறார். இதற்கு மேல் அவர் சென்சார் செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் அவ்வளவுதான். மௌள்ஸ் வலைப் பதிவுகளை ஒரு 15 நாட்களாகத் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். பைஜாமா ஜிப்பாவில் ஸ்மார்ட்டாக வந்திருந்தார். சிவப் பிராகசம் அவர்கள் வலைப் பதிவுகளில் பின்னூட்டம் மட்டும் இடுபவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருக்கிறார் மிக மெதுவாக ஓட்டுகிறார் அவரைத் தொடர்ந்து என்னுடைய பைக்கில் வருவது மிகக் கடினமாக இருந்தது. மகாலிங்கம் அவர்கள் வலைப் பதிவுகளை படிப்பதுடன் சரி என்றும் ஆர்வத்தில் வந்துள்ளதாகவும் கூறினார். அமைதியாக அங்கு நடப்பதை கவனித்து வந்தார். அனுபவம் நிறைந்த அவரைப் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழ் மணம் படிப்பதை நினைக்கும் பொழுது, இது போன்று எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்று எண்ணும் பொழுது தமிழ் மணத்தில் எழுதும் அனைவருக்கும் எத்தனை பொறுப்புகள் உள்ளது என்று தோன்றியது. கடைசியாக செந்தழல் ரவி இவர் இருக்கும் இடமெல்லாம் இருப்பார்கள் அனானி என்பது போல மோகன் குமார் என்ற அனானி நண்பருடன் வந்தார். போட்டோவில் பார்ப்பதை விட இளமையாக இருக்கிறார். வரும் பொழுதே என்னையும், மியூஸையும் என்ன நான் சண்டை போடுற ஆளுங்க எல்லாம் இருக்கீங்களா? சண்டையை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

சந்திப்பில் பேசியது டோண்டுவுடனான சந்திப்பில் போண்டா இல்லாமலா ஆகவே போண்டா போன்றவைகள் குறித்து மீண்டும் எழுதுகிறேன்.

Wednesday, September 13, 2006

குறள்(ரல்)

தமிழ் மணத்தில எந்தக் குறளை வேணும்னாலும் எப்போ வேண்டுமானாலும் எடுத்துப் போடலாம் ஏனென்றால் கண்டிப்பாக யாராவது ஒருவருக்குத் தேவைப்படும்.

எனோ இதையெல்லாம் இன்னைக்கு போடணும்ன்னு தோணுச்சு.

யாரும் படிக்கப் போறதில்லை படிச்சாலும் இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாதுன்னு விட்டு விடத் தான் போறாங்க இருந்தாலும் குறள் இருக்குன்னு சொல்றது தப்பில்லையே.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


மற்றவர் பின் சென்று அவரைப் பற்றித் தவறாகப் பேசுவது தான் நீங்கள் இந்த உலகில் செய்யும் மிகப் பெரிய பாவச் செயல்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.


நாம் எதிரியாக கருதுபவருக்குக் கூட தீங்கு செய்யாமல் இருப்பதே ஒருவருக்கு இருக்கும் பண்புகளில் தலையான பண்பாக கருதப் படும்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


பிறரைக் குற்றம் சொல்பவர்களே மற்றவர் குற்றங்களை பார்க்கும் முன் உங்கள் குற்றங்களை அறிந்து கொண்டால் இந்த உலகின் எந்த கெடுதலும் உங்களை தீண்டாது.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.


பலர் வெறுப்படையும் வகையில் வார்த்தைகளைச் சொல்லுபவன் எல்லோராலும் வெறுக்கப் படுவான்.

குறள் விளக்கம் எதோ எனக்கு தெரிஞ்சதை போட்டிருக்கேன் எல்லாம் context சரியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

தவறாக பொருள் சொல்லி இருந்தால் யாராவது சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

அறிவியலும் ஆன்மீகமும் - 4

காஸ்மாலஜி என சொல்லப் படும் பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அறிவியல் துறையில் சில ஆண்டுகளாக Big bang என்று சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இன்று காஸ்மாலஜியில் நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் எதோ ஒரு வகையில் அடிப்படையாக் இருப்பதும் Big Bang தான்.

ஜார்ஜஸ் லெம்யாட்ரி ( Georges Lemaître ) என்ற ரோமானிய கிறிஸ்துவப் பாதிரியார் தான் முதன் முதலில் 1927ம் ஆண்டு Big Bang மூலமாக இந்தப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று சொன்னவர். பின் ஹீயூபில் இது சாத்தியமே என்பதை பின் நிரூபித்தார். Big Bang தியரி என்ன சொல்கிறது என்பதை எப்படி இதனை நிருபணம் செய்தார் என்ற நோக்கில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். இதற்கு நாம் ஒளியின் சில தன்மைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது ஒளியின் அலைகளாக பயணம் செய்கிறது இதில் wavelength என்பது ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள தூரம்( தூரம் என்றதும் எதோ கிலோமீட்டர் கணக்கில் நினைத்து விடாதீர்கள்(1/100000000000000000 மீட்டர்). இதில் blue shift, red shift என்று சொல்லுவார்கள் அதாவது ஒரு ஒளி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் blue shift ஆகும் உங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது red shift ஆகும். இன்னும் எளிமை படுத்தி சொல்ல வேண்டுமெனில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வெளிச்சமே அதிக தொலைவுக்கு செல்லும் என்று கொள்ளுங்கள். ரயில்வே லெவல் கிராஸிங், போக்குவரத்து லைட் எல்லாமே சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது இதனால் தான்.

ஹீபில் என்ன கண்டறிந்தார் என்றால் பூமியில் இருந்து பல ஒளி நூற்றாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியானது மெல்ல red shift ஆகிக் கொண்டிருக்கிறது என்று. இதன் மூலம் கண்டறிவது என்ன என்றால் மெல்ல அந்த நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் மெல்ல விரிவடைந்து கொண்டிருக்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் இன்று இருந்ததை விட நேற்று அருகில் இருந்தது அதற்கு முன் தினம் இன்னும் அருகில் இருந்தது என்று வைத்துக் கொண்டால் நாம் பின்னோக்கிச் செல்ல செல்ல இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அருகருகே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதாவது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய புள்ளியான இடத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்.

அந்த புள்ளி வடிவான நேரத்தில் இருந்து மிக விரைவாக அனைத்தும் வெடித்து சிதறியது போல bang என்று விரிவடைந்திருக்க வேண்டும் என்பது தான் big bang தியரி. ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விளக்குவது சுலபம். ஆனால் இப்படி நடக்கும் சமயம் அந்த சமயத்தில் என்னென்ன எப்படி எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பது மிகக் கடினம். அதாவது அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள். அவளின் இதயத் துடிப்பு எவ்வளவாக் இருந்திருக்கும் உடனே என்ன நினைத்திருப்பாள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்று சில சமயங்களில் ஒதுக்கி விடலாம். ஐ லவ் யூ என்று சொன்ன உடன் அவனுக்கு கன்னத்தில் பரிசாக கிடைத்தது முத்தமா? அடியா என்பதுதான் முக்கியமாக படும்.

ஆனால் காஸ்மாலஜியில் இதை எல்லாம் ஒதுக்கி விட முடியாது ஏனென்றால் இவை அனைத்துமே காஸ்மாலஜியில் மிக அவசியமாகிறது. இப்படி எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் இதனை விளக்க முயற்சி செய்யும் சமயம் தான் அவர்கள் singularityல் சிக்கிக் கொண்டார்கள்.

நம் பூமி சூரியனை ஏன் சுற்றுகிறது? சூரியன் பூமியை ஈர்க்கிறது அதே சமயம் சந்திரன் பூமியை சுற்றிவதற்கு காரணமும் ஈர்ப்பு விசையால்தான். இந்த ஈர்ப்பு விசை தூரத்தால் பாதிக்கப் படும். சந்திரன் சூரியனைச் சுற்றாமல் பூமியை சுற்றுவதற்கு காரணம் பூமிக்கு அருகில் இருப்பதால் தான். இப்படி எல்லாமே ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றியது என்று சொன்னால் அந்த சமயத்தில் ஈர்ப்பு விசை என்பது எப்படி இருந்திருக்கும். அந்த சமயத்தில் புள்ளியாக இருந்த பிரபஞ்சம் பில்லியன் பில்லியன் டிகிரிகளாக இருந்திருக்கும். அதே சமயம் density என்பது மிக மிக அதிகமாக இருந்திருக்கும். pressue மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு physics equationனும் விளக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் singularity.

All physics equations and laws we have will be broken down during singularity.

Big bang theoryயை முதன் முதலில் ஒரு ரோமானிய பாதிரியார் வெளியிட்டார் என்பது மிக ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. ஏனெனில் கலீலியோ காப்பர்நிக்கசின் தத்துவங்களை சப்போர்ட் செய்தார் என்று அவரை கைது செய்த வாடிகன் இது போன்ற ஒரு அறிவியல் விளக்கத்தை உலகம் ஏழு நாட்களில் தோற்றுவிக்கப் பட்டது என்ற பைபிளை அப்படியே நம்பிக் கொண்டிருந்த சர்ச் இதனை அனுமதித்தது ஆச்சர்யமான ஒரு விஷயமே. ஆனால் சர்ச் இதனை அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணம் big bang என்ற ஒன்று நடந்தது உண்மை ஆனால் அந்த big bang உருவாகுவதற்கு காரணம் இறைவனே என்று சொல்லலாம் என்றுதான். ஆனால் அதனை அனுமதிக்கக் கூடாது big bang என்ற ஒன்று அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானிகள் அதனை physics and mathematical equations மூலமாக தமதாக்கிக் கொண்டார்கள். இருந்தாலும் இந்நாள் வரை singularity என்பதைப் பற்றி எந்த சயன்டிஸ்டும் விளக்க முடியாததால் வாடிகன் அந்த பாயிண்டை Genesis என்று இன்றும் விளக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது என்ன என்றால் நம்முடைய மதங்கள் நமக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் சில முரண்பாடுகள் உள்ளன என்பதுதான். ஹிந்து மதம் சொல்வது போல பிரம்மன் என்ற ஒருவர் இந்த உலகை படைக்கவில்லை. கிறிஸ்துவ மதம் சொல்வது போல ஏழு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப் படவில்லை. இஸ்லாம் சொல்வது போல ஆறு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப்படவில்லை. இன்று நாம் இருப்பது போல ஒரு பால்வெளி உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி பூமியில் முதல் உயிர் உருவாவதற்கு இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்.

இந்த பூமி உருவானது ஒரு cosmic accident. இந்த பூமியில் நாம் உருவானது இன்னொரு cosmic accident. இதை ஏற்றுக் கொள்ள மனித ஈகோவுக்கு கஷ்டமாகக் கூட இருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் உணமை என்பதை மறுப்பதற்கில்லை என்று என்னுடைய pesimisstic mind சொல்கிறது.

optimistic mind இந்த cosmic accident நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன 1/1000000000000000000000000000000 அப்படி இருந்தும் இந்த cosmic accidents நடந்திருக்கிறதே அப்படியானால் இதனை விளக்க முடியுமா உன்னால் may be எங்கோ ஒரு டிவைன் Intervention நடந்ததால் தான் இது சாத்தியமாகி இருக்கும் என்றே நம்பு என்று கூறுகிறது.

இதில் எந்த மனம் சொல்வதை நம்புவது என்பது இன்னும் புரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மதத்தின் பெயரால் இன்று இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் அனைத்துமே மிகப் பெரிய முட்டாள்த்தனம் என்றுதான் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. எந்த மதத்தின் கொள்கைகளுமே நூறு சதம் சரியானது அல்ல என்பதை நாம் எப்படி உருவானோம் என்பதை எல்லா மதங்களும் விளக்கும் விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஒரு பாயிண்டுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் தான் பெரியது, மதம் மாற்றம் சரி தவறு என்று சொல்வது, புனிதப் போர், கோயில் இடிப்பு எல்லாமே அர்த்தமில்லாதது என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் மூலம் தான் சரியான மார்க்கத்தில் செல்ல முடியும் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாகத் தான் தோன்றுகிறது.

மேலும் எனக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறிவியலும் தொடரும்.

Tuesday, September 12, 2006

orkutலிம் போலிகள்

மனிதர்களுல் பொது சிந்தனை எங்கெங்கு எந்த எந்த விஷயங்களில் எல்லாம் இருக்கிறது.

Orkuttians beware.

http://www.ibnlive.com/news/warning-orkutting-can-turn-ugly/21144-3.html

Monday, September 11, 2006

செப்டம்பர் 9/11 சில சிந்தனைகள்

இறந்தவர்களின் எண்ணிக்கை 35,000. என்ன எண்ணிக்கை தவறாக சொல்கிறேன் என்றுஎண்ணாதீர்கள். இதுவும் செப் 11 போன்ற ஒரு நிகழ்வுதான் ஆனால் விமானம் சென்று ஒருவளாகத்தின் மேல் மோதியதால் நேர்ந்த நிகழ்வு அல்ல.
.
.
.
ஒரு வேலை உணவு இல்லாமலும் உணவுப் பற்றாக்குறையால் வரும் நோய்களாலலும் ஒரு நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கை இது.

இதே போன்று எய்ட்ஸால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் செப் 11 அன்று இறந்தவர்களின்எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்.

இன்று வார் ஆன் டெரரிஸம் என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை செலவழித்து வரும் மனிதன் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையோசிக்க வேண்டும்.

நாம் போரிட வேண்டியது உலகில் இருக்கும் வறுமையை, நாம் தீர்வு காண வேண்டியது இன்னும்60 ஆண்டுகளில் பூமியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கிறதேஅந்த தண்ணீர் பஞ்சத்திற்கு. வேரறுக்க வேண்டியது மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்பல வேறு நோய்களை.

மனிதன் உணர்ந்து கொள்வானா?