Wednesday, May 31, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் 6

இன்று உலகில் உள்ள எந்த மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் ஒன்றை மட்டும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அந்தத்த மதங்கள் கோலோச்சியிருந்த சமயத்தில் அதனால் பல இன்னல்களை மக்கள் சந்திக்க நேர்ந்தது.

ஹிந்து மதம் மக்களை பாகுபடுத்தி ஜாதிகளை தோற்றுவித்தது, கிறிஸ்துவ மதம் உலகம் உருண்டை என்று அறிவியல் பூர்வமாக சொன்ன விஞ்ஞானியை கைது செய்ததோடு சூனியக்காரிகள் எரிப்பு என்று படு கொலைகளை செய்துள்ளது. இஸ்லாமிய மதத்தின் பெயரால் இன்று நடக்கும் பயங்கரவாதம் போன்றவைகளைக் கூறலாம்.

மதங்கள் தோற்றுவிக்கபட்ட பொழுது அதனுடைய நோக்கம் இறையை உணர்வதற்காகவே இருந்தது. ஆனால் மனிதன் இறைவனை உணர்வதற்காகவா மதங்களை துணை கொள்கிறான்? அனைது மதங்களும் இறைவனை சென்றடைய உள்ள பாதைகள் தாம் என்பதை உணராமல் இல்லையே என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்று அடித்து கொண்டள்ளவா இருக்கிறான்.

எந்த மனிதனும் நபிகள் நாயகமோ, புத்தரோ, கிறிஸ்துவோ, விவேகானந்தரோ கிடையாது. மனிதனும் மிருகத்தின் பரிமாண வளர்ச்சியில் வந்துள்ளதால் அவனுடைய மிருக குணங்கள் இன்னும் அவனுள் மிச்சம் உள்ளது. அப்படி மிருக குணம் மிச்சமுள்ள மனிதனிடம் மதத்தைக் கொடுத்ததால் அவன் மதம் வழியாக இறையைத் தேடாமல், மற்ற மனிதர்களை தன் வெறிக்கு இரையாக ஆக்கிவிடுகிறான்.

மனிதனுளுலுள்ள ஞான விளக்கை ஏற்ற வந்த மனித குலத்தை தீயிட்டு கொளுத்தப் போகும் தீப் பந்தமாக மாறிவிட்டது வேதனைக்குறியது.

இன்று நாம் நம் மத நம்பிக்கைகளைக் களைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் நம் மத நம்பிக்கைகளை தொடர்வதால் மதங்களில் பெயரால் நடக்கும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே வரும். மனித குலம் அத்தனையையும் அழிக்கும் வல்லமை இன்று நம்மிடம் உள்ளது. ஆகவே மத நம்பிக்கைகளை நாம் களையா விட்டால் அந்த வல்லமை மதத்தின் பெயரால் உபயோகப்படுத்தப்பட்டு விடும்.

Thursday, May 25, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 5

நான் இந்தப் தொடர் பதிவுகளில் நாத்திகம் பேசவில்லை. நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு ஆனால் நான் இறை இருப்பதை மறுக்கவில்லை. இறையை நோக்கி செல்ல பயன்படும் பாதைகளான மதங்கள் மனிதனை அழிவுப் பாதையில் திசை திருப்பி விட்டு விடுகின்றன. அதனால் அந்த மதங்கள்தான் கூடாது என்கிறேன்.

எல்லையில்லாத சக்தி வடிவான இறையை உணர்ந்த ஆன்றோர் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற எண்ணத்தில் சராசரி மனிதர்களுக்கு அந்த சக்தி வடிவை உணர செய்ய எண்ணினர். எல்லா மனிதர்க்கும் இறையை காண்பது எளிதல்ல என்பதை உணர்ந்த சான்றோர் அவரவர் வாழ்ந்த சூழ்நிலை, கலாச்சரங்களுக்கும் ஏற்ப இறை நிலையை போதனை செய்ய மதங்களைப் படைத்தனர்.

நாம் கோயில்களில் நின்று கை சேர்த்து கண்மூடி கும்பிடும் போதும், தர்க்காவில் கைகளை உயர்த்தி கண்மூடி இறையை தொழுகை செய்யும் சமயமும், தேவாலயங்களில் கண்மூடி கை குவித்து பிராத்தனைகள் செய்யும் சமயமும் நாம் ஒரே இறை நிலையைத்தான் உணர்கிறோம்.

இதனை நாம் உணராமல் இன்று மதங்களில் பெயரால் மனிதன் புரியும் கொடுமைகள் எத்தனை என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.

நான் இந்தப் பதிவின் மூலம் இறையை புறக்கணிக்க சொல்லவில்லை, மதத்தை புறக்கணிக்க சொல்கிறேன்.

மத அடையாளங்கள் துறப்பதன் மூலம் இறையை அடையச் சொல்கிறேன்.

மதங்கள் மனிதனை இறையை சென்றடைய வழி காண்பிக்கின்றன. ஆனால் அந்த வழிகளில் எல்லாவற்றிலுமே இன்று மனித ரத்தம் தெளிக்கப் பட்டிருக்கிறது. நாம் அந்த வழிகளிலேயே செல்வதால் மேலும் பல மனிதர்களின் ரத்தங்கள் உதிரப் போகிறது.

நம் பெயரால் இன்னும் மனித ரத்தம் உதிர வேண்டாம் என்று நினைத்தால் மதங்களைப் புறக்கணியுங்கள்.

மனித நேயத்தின் பெயரால் இணைவோம்.

நம் நம்பிக்கைகளில் பெயரால் நடக்கும் கொடுமைகளை நடக்க விடாமல் தடுப்போம்.

Wednesday, May 17, 2006

ஜாதி இல்லையடி என் அனுபவம்

ஜாதி பற்றி பல சண்டைகள் சச்சரவுகளை தமிழ் மணம் சந்தித்திருக்கிறது. டோண்டு போலி டோண்டுவின் சண்டை குமுதம் வரை எட்டி விட்டது.

இதை எல்லாம் காணும் பொழுது நாம் இன்னும் ஜாதி பிணக்குகளால் பிரிந்திரிக்கிறோமா என்று ஒரு கவலை உண்டாகுகிறது. அதை மெய்பிப்பது போல் ஜாதிகள் பற்றி ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தமிழ் மணத்தில் காண முடிகிறது.

உண்மையில் நாம் இன்னும் ஜாதிகளால் பிரிந்திருக்கும் கற்காலத்தில் உள்ளோமா ஜாதிகள் அழியவே அழியாதா என்ற கவலை உள்ளவர்களுக்கு என் சொந்த அனுபவம் சிறிது நம்பிக்கை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த அனுபவம் மண்டல பொறியியல் கல்லூரி திருச்சி அனுபவம் இது.

மண்டலப் பொறியியல் கல்லூரியில் தமிழகத்திற்க்கு இருபத்தி நான்கு சீட்டுகளும், மற்ற மா நிலங்களுக்கு இருபத்தி நான்கு சீட்டுகளும் உள்ளது.

அங்கு ஜாதி மதங்களால் மட்டும் அல்ல பொதுவாக மொழி, மதங்களால் கூட அவ்வளவு வேறுபாடுகள் இல்லை.வேற்று மொழி, மதம், ஜாதி சேர்ந்தவர்கள் அங்கு மிகச் சிறந்த நண்பர்களாகவே இருந்தோம். வேற்று மொழி, மதம், ஜாதி காதல் ஜோடிகளும் இருந்தனர்.

நான் அங்கு படித்த வரை யார் யார் எந்த ஜாதி என்பது எவருக்கும் தெரியாது. நாங்கள் ஜாதிகளால் பிரிந்ததும் இல்லை. மேல் ஜாதியினரை திட்டி தீர்த்ததும் இல்லை. கீழ் ஜாதி என்று யாரையும் பிரித்ததும் இல்லை. பிராமிணர்கள் தங்களை உயர்வாக கருதியதும் இல்லை. அவர்களை யாரும் ஆரிய வந்தேறிகள் என்று திட்டியதும் இல்லை.

மொத்தத்தில் ஜாதி என்ற பேச்சே எங்களிடையே இல்லை.

இன்று படித்த இளைஞர்கள் ஜாதி என்பதை பற்றி அதிகம் யோசிப்பது இல்லை என்றே கூறலாம்.

வயதான கிழங்கள்தான் தான் உயர்ந்தவன் என்று கிறுக்கி கொண்டு திரிகின்றன. மன நிலை சரி இல்லாதவர்கள்தான் அதைக் கண்டு பொங்கி எழுந்து எல்லொருடைய குடும்பங்களையும் திட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

ஒரு வேளை நான் படித்த சமயத்தில் யாரேனும் பிராமிணர் என் ஜாதி உயர்ந்தது என்று கூறியிருந்தால் ( என்னுடன் படித்தவர்களோ அல்லது பொதுவாக படித்த இளைஞர்களோ அப்படி கூறுவார்கள் என்று நான் நம்பவில்லை ) அதனைக் கண்டு சிரித்து சென்றிருப்போம். அவ்வளவே எங்களுக்கு செய்ய வேறு வேலைகள் உள்ளது உளறுபவர்கள் உளறிக் கொண்டே இருக்கட்டும் என்று நடை கட்டியிருப்போம்.

வரும் படித்து யோசிக்கும் தலை முறையில் ஜாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

பல நூற்றாண்டுகளாக உள்ள நடை முறை என்பதால் சிறிது காலம் பிடிக்கிறது.

நான் இந்தப் பதிவை எழுதும் நோக்கம் ஜாதி பெரிது என்று எழுதினால் அதற்க்கு சிலர் ஒத்து ஊதுவதால் அவர்கள் சரி என்பதில்லை. சிரித்து ஒதுங்கி விடலாம், குடும்பத்தை வம்புக்கிழுப்பதால் ஒரு உபயோகமும் இல்லை என்று சொல்வதற்காக.

இது பற்றி அறிந்து பலர் அப்படி ஒதுங்கிதான் உள்ளார்கள், ஒதுக்கியும் உள்ளார்கள் என்று தெரியும். நான் புரிந்து வைத்திருப்பதை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள் என்றும் தெரியும் இருப்பினும் பல நாள் கை அரித்ததால் இந்த பதிவு.

Tuesday, May 16, 2006

சொன்ன கணம்

" நான் உன்னை விரும்பவில்லை
வேறு ஒருவனை விரும்புகிறேன் "
உன் வாய்ச்சொல்லை எதிர்பார்க்க
வில்லை என்றால் உண்மையில்லையடி

இந்தக் கணத்திற்க்கு பயந்து
ராத் தூக்கம் தொலைத்த
நாட்களின் எண்ணிக்கை ஒழுங்காக
தூங்கிய நாட்களை தோற்கடிக்குமடி

இதனை எப்படி எடுத்துக்
கொள்ளலாம் என்று நான்
எண்ணிய நாட்கள் தூக்கம்
தொலைத்த நாட்களை தோற்கடிக்குமடி

ஆனால் யுகங்களாய் யோசித்திருந்தாலும்
அந்த கணத்தில் நான்
உள்ளுக்குள் உடைந்ததை அளவை
அணுவளவும் குறைத்திருக்க முடியாதுடி

இந்த கணத்திற்கு பதில்
நான் ஆயிரம் தடவை
நண்பர்களின் துரோகம் தாங்க
சொன்னாலும் ஒத்துக் கொண்டிருப்பேனடி

அந்தக் கணத்தின் கொடுமை
இந்த சொல் கேட்ட
பிறகும் இயங்கிக் கொண்டிருந்த
என் காதினால் அதிகரித்தடி

நீ சரியென்றிருந்தால் கூட
என் வாழ்க்கைப் பாதை
இவ்வளவு தெளிவாகி இருக்கும்
என்று சொல்ல முடியாதுடி

மணமில்லை எனக்கு மரணமுண்டு
மரணம் வரும்வரை மூச்சிழுப்பேன்
பெற்றோரை கவனித்துக் கொள்வேன்
சமூக நலன் காப்பேன்

பின் மரித்துப் போவேன்

Tuesday, May 09, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 4

மதம் எப்படித் தோன்றியது? இன்று நம்மை நாத்திகம் பேச வைக்கும் பகுத்தறிவுதான் மதம் தோன்றவும் காரணமாக இருந்தது.

மனிதனின் பகுத்தறிவு அறிவியல் வளராத காலத்திலும் தன்னைச் சுற்றி நடப்பது குறித்து விளக்கம் தேடியது. காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் மறைவது ஏன் என்பதில் தொடங்கி பிறப்பு இறப்பு வரை அனைத்திற்க்கும் விளக்கம் தேடியது. ஆனால் அவனால் அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவனால் ஆராய்ந்து அறிய முடியாத விசயங்கள் பல இருப்பதைக் கண்ட மனிதன் தன் அறிவுக்கு புலப்படாத விசயங்கள் அனைத்தையும் இறைவன் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தான்.

இப்படி தன்னால் ஆராய்ந்து அறிய முடியாத விசயங்களை இறைவன் என்று நினைத்தது தான் மனிதனின் மதங்களின் பெயரால் செய்ய ஆரம்பித்த முதல் மூடத்தனம்.

இறை நிலை என்பது ஒரு எல்லையில்லாத சக்தி நிலை.

இந்த பூமி உருவாகும் சமயம் அப்பொழுது இருந்த சுற்றுப் புறச் சூழல்களில் ஒரு பில்லியனில் ஒரு வீதம் சூழல் வேறு மாறி இருந்திருந்தாலும் உயிர் உருவாகி இருக்காது என்று அறிவியல் நமக்கு கூறுகிறது ஆகவே இறை நிலை இல்லை என்பது மூடத்தனம்.

ஆனால் இறை நிலை என்பது மதம் சார்ந்தது என்று எண்ணுவது அதை விட மூடத்தனமானது.

புரியாத விசயங்கள் அனைத்தும் இறைவன் என்று எண்ணியதால் தான் இன்று ஒவ்வொரு மதமும் வெவ்வேறு இறைவனை சென்றடைகிறது என்று மனிதன் எண்ணுகிறான்.

என் இறைவன்தான் உயர்ந்தவன் என் மதக் கோட்பாடுதான் உயர்ந்தது என்று எண்ணுபவர்களை விட மூடர்கள் உலகில் இல்லை.

அனைத்து மதங்களைலும் பொதுவான ஒரு விசயம் உண்டெனில் அது புனித நூல்கள், அவை போதனை செய்வது அன்பையும், மனித நேயத்தையும்.

கிருஷ்ணரும், நபிகளும், கிறிஸ்துவும் ஒரே கால கட்டங்களில் தோன்றி இருந்தால் இறை நிலைக்கு ஒரே பெயர் கிடைத்திருக்கும், நாமும் அவர்கள் அனைவரும் ஒரே இறை நிலையை பற்றித் தான் போதனை செய்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்திருப்போம்.

ஆனால் அவர்கள் வெவ்வேறு சமயங்களில் கலாச்சாரங்களில் தோன்றியதால்தான் ஒவ்வொருவருக்கும் இறைவன் அந்தந்த கலாச்சாரங்களின் அடிப்படையில் சித்தரிக்கப் படுகிறான்.

இன்று இதனை உணராத மனிதன் மதத்தை இறை நிலைக்கு முன் வைத்து மதத்தின் பெயரால் அழிவு வேளைகளில் ஈடுபட்டு வருகிறான்.

மதத்தை தாண்டி இறை நிலையை உணருங்கள் மதங்களைப் புறக்கணித்து மனித நேயத்தின் மூலம் இறை நிலையை அடையுங்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Friday, May 05, 2006

மதம்தனைப் புறக்கணியுங்கள் 3

ஹிந்து மதத்தின் வயது - 4000 ஆண்டுகள்
யூத மதத்தின் வயது - 3500 ஆண்டுகள்
பௌத்த மதத்தின் வயது - 2500 ஆண்டுகள்
கிறிஸ்துவ மதத்தின் வயது - 2000 ஆண்டுகள்
இஸ்லாமிய மதம் - 2000 ஆண்டுகள்

மனித பரிமாண வளர்ச்சியில் முதன் முதலாக மனித இயல்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் வயது - 4,000,0000 ஆண்டுகள்

முழு வளர்ச்சியுடன் குகைகளின் சித்திரம் தீட்டி தொடர்பு கொண்ட மனிதனின் வயது - 120,000 ஆண்டுகள்

4000 ஆண்டுகள் வயதுடைய சின்னப் பயலான மதம் 100,000 ஆண்டுகள் வயதுடைய மனித இனம் எது முக்கியம் என்ற கேள்வியை நாம் இன்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு லட்சம் ஆண்டுகள் மனிதன் மதம் இல்லாமலே வாழ்ந்து வந்திருக்கிறான்.

மதங்கள் உருவான நோக்கம் மனிதம் தழைத்தோங்கவே...

மனித குழத்திற்கு அழிவை உண்டாக்கும் மதம்தனை புறக்கணிங்கள்.

இதனை படித்து நான் நாத்திகன் நம்பிக்கை இல்லாதவன் என்று முடிவு செய்து விடாதீர்கள்

என் இறைவனுக்கு பெயர் இல்லை, ராமர், அல்லாஹ், கிறிஸ்து என்று என் இறைக்கு நான் பெயர் சூட்டுவதில்லை. எனக்கு மார்கங்களை கீதை, குரான், பைபிள் கற்றுத் தருவதில்லை. எனக்கு இறையைச் சென்றடைய முகமது நபிகளோ, கிறிஸ்துவோ, கிருஷ்ணரோ போதனை செய்யவில்லை.

இதனைப் பின்பற்றுவதால் ராமர் கோயில் கட்டுவதற்கு நான் பாபர் மசூதி இடிப்பதில்லை, புனிதப் போர் என்று மற்ற நாடுகள் மேல் படை எடுப்பதில்லை, மதம் காக்க தீவிரவாதம் மேற்கொள்ளவில்லை.

இந்தக் கொடுமைகள் செய்வதற்கு நான் துணை போவதுமில்லை.

என் மதத்திலிருந்து மத மாற்றம் செய்கிறார்கள் என்று கோபம் கொள்வதில்லை.

மதம் பிடித்துள்ள வரை மனிதனின் மதம் அவனை மிருகமாக்கி வருகிறது.

எல்லா மதங்களும் ஒரே இறை நிலையையே சென்றடைகிறது. நான் மத அடையாளங்களை துறந்ததால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும் உங்களுடைய கடவுளுக்கு பிடித்தமானவன் நானாகவே இருப்பேன்.

கிறிஸ்துவும், முகமது நபிகளும், கிருஷ்ண பரமாத்மாவும் இன்று இருந்திருந்தால் மனிதனை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் மதம்தனைப் புறக்கணியுங்கள் என்றே சொல்லி இருப்பார்கள்.

ஹிந்து, முசல்மான், கிறிஸ்துவர் என்ற அடையாளம் துறந்து மனிதன் என்ற அடையாளம் பூணுங்கள் மனித நேயத்தை மதமாகக் கொள்ளுங்கள்.

Thursday, May 04, 2006

மதம்தனைப் புறக்கணியுங்கள் - 2

மனிதம் தழைக்க உருவான மதம் இன்று மனித குலத்தையே அழிவு பாதையில் இட்டு சென்று கொண்டிருக்கிறது.

வலை பதிவுகளே அதற்கு சாட்சியாக உள்ளது. இன்று வலைப் பதிவுகள் இடும் அனைவருமே நன்கு படித்தவர்கள் இன்றுள்ள உலக நடப்பை மற்ற மக்களைவிட நன்றாக உணர்ந்தவர்கள் ஆனாலும் இங்கு வரும் பதிவுகள் எப்படி உள்ளது?

கிறிஸ்துவர்கள் அனைவருமே கொடியவர்கள் என்று ஒருவர் எழுதுகிறார், இஸ்லாமிய மதங்களில் தீவிரவாதம் பற்றி ஒருவர் எழுதுகிறார், ஹிந்துக்களின் போக்கு பற்றி மற்றொருவர் எழுதுகிறார்.

இதன் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

உங்கள் வலைப் பதிவுகள் தீவிரவாதத்தையும், கசப்பான எண்ணங்களையுமே தூண்டி விடுகிறது.

மதத் தீவிரவாதிகளுக்கும் இது போன்ற பதிவுகளை எழுதுபவர்களுக்கும் ஒரே வித்தியாசம் இது போன்ற பதிவுகளை எழுதுபவர்களுக்கு தீவிரவாதம் செய்ய சந்தர்ப்பம் கிட்டவில்லை என்பதுதான்.

எனக்கு சில காலம் முன்பு வந்த மின்னஞ்சலில் பிடித்த மின்னஞ்சல்

ஒரு கருத்தை வெளி இடும் முன் அந்தக் கருத்தை மூன்று விதமாக வடி கட்டி விடுமாறு கூறி இருந்தது

1. இது உண்மைதான என்பது முதல் வடி கட்டி

2. இது தேவைதானா என்பது இரண்டாம் வடிகட்டி

3. இது மற்றவர் மனதை புண்படுத்துமா என்பது மூன்றாம் வடிகட்டி

பதிவுகள் இடும் முன்னரும் நாம் இந்த மூன்று வடிகட்டிகளை பயன் படுத்த வேண்டும்

மத துவேஷங்களை எந்த விதத்தில் தூண்டினாலும் அதுவும் மதத் தீவிரவாதமே.

பதிவுகளையாவது மதங்களை துறந்து எழுதுங்கள் எழுத எத்தனையோ அற்புதமான கருத்துக்கள் உள்ளன.

இந்தப் பதிவு மன வேதனையின் காரணமாக எழுதப்பட்டது.

Wednesday, May 03, 2006

ஆய்வு செய்வதில் ஆனந்தம் என்சொல்

காதல் கொள்ள
காரணம் என்ன
ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

காலை மலர்கள்
பனித்துளியில் குளித்திட
பார்த்து சிலிர்த்ததை
தொட்டு மகிழ்ந்ததை

ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

குழந்தையின் சிரிப்பில்
கபடமில்லாக் களிப்பில்
கண்டு மகிழ்ந்ததை
அள்ளி கொஞ்சியதை

ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

குழலின் தேனிசை
கொணரும் ஏகாந்தம்
கேட்டு கொண்டாடியதை
கண்மூடி மெய்மறந்ததை

ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

கல்லூரி நாட்கள்
நினைவு பொக்கிஷங்கள்
பகிர்ந்து மகிழ்ந்ததை
பாடித் திரிந்ததை

ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

மழை சாரல்
ஆனந்தத் தூறல்
நனைந்து மகிழ்ந்தை
கண்மூடி கழுத்துயர்த்தியதை

ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

தோழமையோடு உரையாடல்
ராத்தூக்கம் நினைவில்லாமல்
பேசி சிரித்ததை
சண்டை இட்டதை

ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

காதல் கொள்ள
காரணம் என்ன
ஆய்வு செய்வதில்
ஆனந்தம் என்சொல்

மதம்தனை புறக்கணியுங்கள்

மதங்கள் மனிதனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அவனுக்கு நீதி போதனை, தர்மம், ஒழுக்கம், மனித நேயம் போன்றவைகளை கற்றுத் தரவே மதங்கள் உருவாக்கப்பட்டன. ராமர் நம்மிடையே வாழ்ந்து வந்தால் பாபர் மசூதியை இடிக்க அனுமதி சொல்லி இருப்பாரா? கிறிஸ்து சிலுவைப் போர் என்ற பெயரில் படை எடுக்கச் சொல்லி இருப்பாரா? முகமது நபிகள் இன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை அனுமதித்திருப்பாரா?

பாபர் மசூதி இடிப்பு, சிலுவைப் போர், இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் அல்ல தீண்டாமை, நிற வெறி, பெண்ணடிமைத்தனம் என்று மதம் என்ற பெயரால் மனிதன் என்னென்ன கொடுமைகளைச் செய்கிறான். இது மனிதனின் தவறு என்றாலும் அதனை மனிதன் எந்த ஒரு மன கிலேசமும் இல்லாமல் செய்ய மதம் அவனுக்கு சலுகை அளிக்கிறது.

எந்த ஒரு கொலைக் குற்றவாளிக்கும் குற்ற உணர்வு என்பது இருக்கும் அப்படி இல்லாதவனை நாம் சைக்கோ என்ற கொடூர புத்திக்காரன் என்கிறோம் ஆனால் இன்று மதத்தின் பெயரால் புனிதப் போர் என்று ஒரு சைக்கோ கூட செய்ய இயலாத கொடூரங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மதங்களின் பெயரால் அரசியல் பலம் வேறு இவர்களுக்கு அதனால் இவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனையும் கிடையாது.

மதம் என்பது இன்று மனிதனின் ஆக்கங்களுக்கு பயன் படுவதை விட அவனுடைய அழிவிற்கே வழி வகுக்கிறது.

மனிதனின் கொடூர புத்தியையும், வக்கிர எண்ணங்களையும் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப் படுத்திக் கொள்ளவே மதம் இன்று பயன்படுகிறது.

ராமர் கோயில் இடித்தவர்களும், சிலுவைப் போர் புரிபவர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் மதம் என்ற ஒன்று இல்லை எனில் இந்த கொடுரங்களை செய்வார்களா? செய்வார்கள் ஏனெனில் அவர்களின் வக்கிர புத்தி அது இல்லை எனில் மற்றொரு கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கும் ஆனால் அந்த சமயத்தில் அவர்களால் புனிதப் போரில் ஈடுபட்டதாக நம் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

என் மதத்தை நம்பி இருக்கும் பல கோடி மக்களுக்காக செய்தேன் என்று தன்னுடைய செயலுக்கு காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது.

பிறப்பால் ஹிந்துவாகிய நான் இன்று ஹிந்து மதம் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதால் இன்று மதக் கலவரங்கள் நிற்கப் போவதில்லை.

நான் ஹிந்து, நீ முஸ்லீம் நாம் இருவரும் சகோதரர் என்று வாழ்ந்தால் மதங்களின் பெயரால் நடக்கும் கொடுமைகளை நிறுத்த முடியாது.

ஏனெனில் நான் ஹிந்து என்று அடையாளம் காட்டிக் கொள்வதாலேயே ஹிந்துவின் காவலர்கள் என்று கொடுமைகள் புரிகிறார்கள்.

ஹிந்து, முஸ்லீம் என்ற அடையாளங்கள் களையப்பட வேண்டிய நேரம் வந்தாகி விட்டது அந்த மாதிரி அடையாளங்களை களையப் படாவிட்டால் கண்டிப்பாக நியுக்கிளியர் பாம் மதங்களின் பெயரால் வீசப் பட்டு மனித குலம் அழிவைச் சந்திக்கும்.

அது அந்த பாம் வீசிய ஒரு தனி ஒரு மனிதனின் தவறாக கண்டிப்பாக இருக்காது, மதம் என்ற ஒன்றை பின் பற்றிக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களின் தவறும்தான்.

Tuesday, May 02, 2006

இவர்கள் இந்தியர்களா என்ற பதிவிற்கு பின்னூட்டம்

http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_22.html

நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி குண்டு புகை நம்மை நடுவே நாம் வாழ்க்கையை கழிக்காமல் இருக்கிறோம், நாம் இன்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்று நம்முடைய நாட்களை கழிக்கிறோம் என்றால் அது நம்முடைய எல்லையில் தன் வீடு மறந்து சொந்தம் துறந்து இல் வாழ்வு துறந்து நம்மை காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காவல் வீரர்களால் மட்டும்தான்.

ஆகவே இங்கு நாம் அவர்களைப் பற்றி எழுதும் முன் சிறிது யோசனை செய்த பின்னரே எழுத வேண்டும், முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை யாரைப் பற்றி வேண்டுமெனிலும் நாம் எழுதலாம், கேவலமாக திட்டலாம், அதற்கு நமக்கு உரிமை உண்டு ஆனால் இந்த விசயத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடுவது தவறாகும்.

அதற்காக இந்த விசயத்தை இப்படியே விட சொல்லவும் இல்லை. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா நாம்?

பொதுவாக சைன் ஆப் கமாண்ட் என்பது ஆர்மியில் உயிரைவிட உயர்வாக கருதப்படும் ஒன்று ஏனெனில் சைன் ஆப் கமாண்டை ஒருவர் கடைபிடிக்கவில்லை என்றால் போகப் போவது இன்னொருவர் உயிர் அல்ல அந்த முழு குழுவில் உள்ள அனைவரின் உயிருமே ஆகவே சைன் ஆப் கமாண்ட் என்பதுதான் ஆர்மியில் மிகவும் முக்கியமாக கடைபிடிக்கப்பட வேண்டிய விசயம். ஆகவே ஒரு குழு தலைவர் சொல்லாமல் இந்த மாதிரி தவறுகள் நிகழ்வது மிகவும் கடினம்.

அதற்காக குழுத் தலைவரே இது போல கட்டளை இட்டார் என்றும் கூறவில்லை. வட கிழக்கு விவாகாரங்களில் நம்முடைய பாலிசி மேக்கர்ஸ் நடந்து கொள்ளும் விதமே இவ்வாறு தவறு நடக்க காரணம். மாற்றாந்தாய் பிள்ளைகளை பார்ப்பது போல வட கிழக்கு விவகாரங்களில் நம்முடைய அரசு நடப்பதால்தான் இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன். நம்முடைய ராணுவம் காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பல மா நிலங்களிலும் உள்ளதே இது போன்ற தவறுகள் அங்கெல்லாம் நடக்காமல் இங்கு நடக்க காரணம் அரசின் அலட்சிய போக்கே.

ஆஸ்பத்திரியில் கற்பழிப்புகள் நடக்கவில்லையா, போலீஸ் நிலையங்களில் நடக்கவில்லையா? டெல்லியில் நடக்கும் பாலியல் கொடுமைகள் போல எங்குமே நடப்பதில்லை ஆகவே ஒட்டு மொத்த பாரதத்தயே கீழ்தரமாக சித்தரிக்கும் வகையில் அந்த ஜெய் ஹிந்த் என்ற எழுதப் பட்டிருப்பது வேதனையை உண்டாக்குகிறது.

இந்தப் பதிவும் நம் பாரதத்திலா இப்படி என்ற வேதனையில் எழுதப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன் இருப்பினும் மனதில் ஒரு வேதனை அந்த ஜெய் ஹிந்த் என்ற சொற்களை கண்டு.