Monday, September 11, 2006

செப்டம்பர் 9/11 சில சிந்தனைகள்

இறந்தவர்களின் எண்ணிக்கை 35,000. என்ன எண்ணிக்கை தவறாக சொல்கிறேன் என்றுஎண்ணாதீர்கள். இதுவும் செப் 11 போன்ற ஒரு நிகழ்வுதான் ஆனால் விமானம் சென்று ஒருவளாகத்தின் மேல் மோதியதால் நேர்ந்த நிகழ்வு அல்ல.
.
.
.
ஒரு வேலை உணவு இல்லாமலும் உணவுப் பற்றாக்குறையால் வரும் நோய்களாலலும் ஒரு நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கை இது.

இதே போன்று எய்ட்ஸால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் செப் 11 அன்று இறந்தவர்களின்எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்.

இன்று வார் ஆன் டெரரிஸம் என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை செலவழித்து வரும் மனிதன் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையோசிக்க வேண்டும்.

நாம் போரிட வேண்டியது உலகில் இருக்கும் வறுமையை, நாம் தீர்வு காண வேண்டியது இன்னும்60 ஆண்டுகளில் பூமியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கிறதேஅந்த தண்ணீர் பஞ்சத்திற்கு. வேரறுக்க வேண்டியது மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்பல வேறு நோய்களை.

மனிதன் உணர்ந்து கொள்வானா?

0 comments: