Wednesday, August 30, 2006

Are spiritual masters schizophrenic சிந்தனைகள்

விவாதம் மிக நன்றாக சென்று கொண்டிருந்தது. அதனால் ஊடால் புகுந்து என்னுடைய கருத்தையும் கொஞ்சம் சொல்லாமுன்னு அடிச்சேன் அதை இங்க பதிவா இட்டிருக்கேன்.

இந்த விஷயத்தில பார்த்தீர்களானால் ராம கிருஷ்ண பரமஹம்சர் இருந்த கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு மனநிலை சரி இல்லை என்று வைத்துக் கொள்வோம் உடனே என்ன சொல்வார்கள் பேய் பிடித்து விட்டது என்று உடனே பூசாரியிடம் சென்று வேப்பிலை அடித்து அமர்களப் படுத்தி விடுவார்கள்.

மேலும் இந்த கால கட்டம் என்பது அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்த காலம் எல்லாமே Deity தான். சூரியன் முதற் கொண்டு அனைத்தயுமே மக்கள் கடவுளாக வழி பட்டு வந்த காலம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் அதுவும் ஒரு பெரிய நட்சத்திரம் இல்லை மத்திய சைஸ் நட்சத்திரம் என்று தெரிந்திருக்கவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் மக்கள் தங்களால் விளக்க முடியாத அனைத்து விஷயங்களுடனும் ஒன்று பயத்துடனோ இல்லை மரியாதையுடனோ பார்த்து வந்த கால கட்டம் அது.

இது போன்ற சூழ்நிலையில் ராம கிருஷ்ண பரமஹம்ஷர் schizophrenic ஆக இருந்து அதனை மக்கள் பேரானந்தம் என்று எடுத்துக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருந்திருக்கிறது.

ஆனால் நம்மால் அதனை உறுதி படுத்தவோ இல்லை இல்லை என்று மறுக்கவோ இயலாது. அப்படி உறுதி செய்வதும் தவறாகி விடும், மறுப்பதும் தவறாகி விடும்.

இங்குதான் ம்யூஸ் அவர்களின் இந்தக் கருத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

///
இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை.
///

Muse has put it beautifully here.எனக்கும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு கடவுளை நம்புவதன் மூலம், ராம கிருஷ்ண பரமஹம்சர் பேரானந்த நிலையை அடைந்தார் என நம்புவதன் மூலம் ஒருவனுக்கு மன தைரியம், நம்பிக்கை போன்ற பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் கிடைக்கிறது என்றால் we shouldnt have discussed this at all.

ஆனால் பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை.

மதங்களால் நன்மைகள் மட்டுமே இல்லை அதனால் பல பிரச்சனைகளும் வருகின்றன. (என்னைப் பொறுத்த வரை மதங்கள் தான் மனித குலத்துக்கு மிகப் பெரிய பிரச்சனை என்னுடன் பலர் வேறுபடுவர் மேலும் இது இங்கு விவாதிக்கப் படவில்லை ஆனால் மதங்களால் மனிதர்களுக்கு தொல்லைகள் உண்டு என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்).

மேலும்

டாவின்ஸி கோட் நாவலில் ஒரு வரி வரும். we worship the gods of our fathers. என்னடா கடவுள் அன்றைக்கும் ஒன்றுதான் இன்றைக்கும் ஒன்றுதான் ஆகவே என்ன பெரிய ஸ்டேட்மெண்ட் என்று நினைகாதீர்கள். நாம் செய்வது நம் fore-fathers கடவுளை என்றால் அவர்கள் தவறாக எதையோ கடவுள் என்று நினைத்து தவறாக செய்து workship கொண்டிருந்தால்?

இது போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த விவாதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் எனக்கு தோன்றுகிறது.

உங்களின் முக்கியமான கேள்விக்கே நான் வரவில்லை என்று நினைக்கிறேன் அதற்குள் என்ன இவ்வளவு பெரிய பதில் என்று எண்ண வேண்டாம். உங்களின் கேள்விக்கு பதிலை அளிக்கும் விதமாக என்னுள் இருக்கும் ஆன்மீகம் குறித்த சிந்தனைகளை அப்படியே வெளிப்படுத்தியும் உள்ளேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கு செல்கிறேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கான விஷயத்திற்கு வந்து விட்டேன்.

அதாவது இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் அந்த கால கட்டத்தில் வாழ்ந்த சிலருடைய கருத்துக்களை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ம்யூஸ் அவர்கள் விவேகானந்தரே ராம கிருஷ்ண பரமஹம்சரை பைத்தியமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு காலகட்டத்தில் கருதினார் என்று கூறியுள்ளார், பின் அவருடைய கருத்துக்களை நம்பி அவருடைய கொள்கைகளைப் பின்பற்றினார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் விவேகானந்தரினால் மட்டுமே Influence ஆகி ஒரு முடிவுக்கு வருவதும் தவறாகும்.

மேலும் தெ.கா. அவர்களின் கருத்துக்களையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும் எந்த அடிப்படையில் நாம் ஒருவரை மனநிலை சரியில்லாதவர், மனநிலை சரியுள்ளவர் என்று பிரிக்க முடியும்? எதோ ஒரு படத்தில் வரும் வசனம் போலத்தான் சென்று விடும் அவன் பணப் பைத்தியம், அவன் பெண் பைத்தியம் என்று எல்லோருமே ஒரு வகைப் பைத்தியம்தான்.

இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது மிக மிக குழப்பமாகத்தான் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் conclusion என்பது ஒவ்வொரு மனிதர்களிடமும் விட்டு விடுவது தான் சரி என்று தோன்றுகிறது கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லையென்றால் கல் என்பது போல. ஆனால் இது போன்றும் இருக்கலாம் என்ற மாற்று சிந்தனைகளையும் கண்டிப்பாக போதனை செய்ய வேண்டும். ராமர் என்பவர் ஒருவருடைய கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார், அவர் உண்மையல்ல என்று எல்லோரும் நம்பாவிட்டாலும் அந்த மாற்று சிந்தனை போதிக்கப் பட்டிருந்தால் நமக்கு சகிப்புத் தன்மை என்பது அதிகரித்திருக்கலாம் என்று நினைப்பதுண்டு அது போல தான் இந்த விஷயமும்.

1 comments:

')) said...

குமரன்,

தங்கள் விரிவான விளக்கங்களுக்கு நன்றி. உங்கள் பதில் நிச்சயம் இது பற்றிய அதிகப்படியான புரிதலைக் கொடுத்திருக்கிறது. மீண்டும் பேசலாம், விரிவாக.