Monday, April 09, 2007

GOD must be alien!!!! - 1

"Hayflick limit" பூமியில் உள்ள உயிரினங்கள் ஏன் முதுமை அடைகிறான் ஏன் இறந்து போகிறான் என்பதை மிக எளிய முறையில் விளக்கும் கண்டுபிடிப்பு. உயிரினங்களுக்கு அடிப்படையானவை செல்கள். ஆணின் விந்து பெண்ணின் ஓவத்துடன் இணைந்த உடன் ஒரு செல் ஒன்று உருவாகுகிறது. இந்த ஒரு செல்லில் இருந்து தான் மனிதன் என்பவன் உருவாகுகிறான். இந்த ஒரு செல் விந்து ஓவத்துடன் இணைந்த சிறிது நேரத்திலேயே பல செல்களாக பிரியத் துவங்குகிறது.

மனிதனுடைய உடலில் பல வகையான செல்கள் உள்ளன. நமது தோலில் உள்ள செல்கள் நமது ரத்த நாளங்களில் உள்ள செல்களை விட வித்தியாசமானவை. ஆனால் இவை அனைத்தும் ஒரே ஒரு செல்லில் இருந்து தான் உருவாகுகிறது. அந்த ஒரு செல் ஒத்த பல செல்களாய் மாறிய உடன், ஒவ்வொரு செல்லிலும் சில ஜீன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். மற்ற ஜீன்கள் வேலை செய்யாமல் அமைதியாகி விடும். இப்படி ஜீன்கள் வேலை செய்வதையும் செய்யாததையும் பொறுத்து அந்த ஒரு செல்லில் இருந்து பிரிந்து வந்த ஒத்த செல்கள் வேறு வேறு செல்களாய் மாறத் தொடங்கும்.

இப்படி ஒவ்வொரு செல்லும் மாறி வேறு வேறு செல்களாய் மாறுவதை Cellular differentiation என்று சொல்லுவார்கள்.

இந்த Cellular differentiation முழுமை அடைந்த உடன், நம் உடலில் உள்ள செல்கள் பிரியத் தொடங்கும், பிரிந்து புது செல்களாய் செல்கள் உருவாக உருவாக பழைய செல்கள் இறக்கக் துவங்கும். ஆனால் இந்த செல்கள் பிரிந்து கொண்டே இருப்பது இல்லை ஒரு குறிப்பிட்ட தடவை பிரிந்த உடன் இந்த செல்கள் மீண்டும் பிரியும் தன்மையை இழக்கின்றன. இப்படி எத்தனை தடவை இந்த செல்கள் பிரியும் என்பதை மிக துல்லியமாக வரையறுத்து சொல்வதுதான் "Hayflick limit".

மனிதர்களுக்கு "Hayflick limit" 52, அதாவது மனிதர்களுடைய செல்கள் 52 தடவை மட்டுமே பிரிந்து போகும் தன்மை கொண்டது. இதில் முதல் முறையாக உருவான செல்களுக்கும் 52 தடவை உருவாகும் செல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. 52 தடவை பிரிந்து உருவான செல்களால் தான் முதுமை உருவாகுகிறது.

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 100,000,000,000,000 செல்கள் அதாவது 1 போட்டு 14 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனை வருமோ அத்தனை செல்கள்.

ஆனால் இதில் இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் 10 போட்டும் 14 பூஜ்ஜியங்கள் போட்டால் வரும் தொகை கொண்ட செல்களை உடைய நாமும் ஒரே ஒரு செல் கொண்ட ஒன்றும் உயிரினம் தான். இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் நம்முடைய கொள்ளு கொள்ளு கொள்ளு என்று பல கொள்ளு போட்டால் கிடைக்கும் கொள்ளுத் தாத்தா இந்த ஒரு செல் உயிரினம் தான்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நம்மால் பார்க்க முடிந்த அண்டவெளிகள் மட்டும் 100, 000, 000, 000 அதாவது 1 போட்டு 11 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனையோ அத்தனை. நம்மால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எத்தனை அண்டவெளிகள் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நம் உடலில் இருக்கும் ஒரு செல் மட்டும் தனியாக எடுத்தால் நம் கண்களுக்குக் கூடத் தெரியாது. இந்த பிரபஞ்சத்தை ஒரு உருவமாக எடுத்துக் கொண்டால் நம் அண்ட வெளி என்பது ஒரு செல் என்று வைத்துக் கொள்ளலாம் அதாவது நமது அண்டவெளி என்பது கண்களுக்குப் புலப்படாத ஒரு செல் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் சமயம். இந்த அண்ட வெளியுடன் ஒப்பிடும் சமயம் நமது சூரியனை ஒரு செல்லாக கருதலாம். அதாவது நமது மொத்த அண்டவெளியையும் மனிதன் உருவத்துக்கு சுருக்கினால் சூரியனை கண்களால் காண இயலாது.

நமது சூரியனை மனிதனையும் ஒப்பிடவே முடியாது. ஒரு லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்த சூரியனுடன் நம்மை எப்படி ஒப்பிடுவது?

இதற்கும் இந்த பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

கடவுள் என்பவரைப் பற்றி நாம் யோசிக்கும் சமயத்தில் எல்லாம் நாம் அவர் எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்தி வடிவமாகத்தான் கருதுகிறோம்.

இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தி வடிவம் இறைவன் என்று வைத்துக் கொண்டால் நம்மையும் அவரேதான் கட்டுப்படுத்துகிறார் என்பது ஆணவத்தின் உச்சகட்டம். இந்த பிரபஞ்சத்துடன் நம்மை ஒப்பிட்டு நாம் தூசு என்று நினைத்தால் கூட அது ஆணவத்தின், மூடத்தனத்தின் உச்ச்சகட்டம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் நம்மையும் ஒரே சக்தி கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டால் அது நம்முடைய மூடத்தனத்தின் உச்சகட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த பிரபஞ்சத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்தி தான் உண்மையான இறைவன். அப்படி என்றால் கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது யாரை எதனை?

கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வேற்றுகிரகவாசிகளாக தான் இருக்க வேண்டும். முட்டாள்தனமாக தோன்றினாலும் இது தான் உண்மை என்பதற்கு நம்முடைய எல்லாப் புனித நூல்களிலும் உதாரணங்கள் இருக்கின்றன நம் கண் முன்னே இதற்கு சாட்சியங்களும் இருக்கின்றன. அவை என்னவென்றால் ......

5 comments:

said...

http://www.maraththadi.com/article.asp?id=912

http://www.maraththadi.com/article.asp?id=246


http://www.maraththadi.com/article.asp?id=522

')) said...

அருமையான ஆரம்பம். கலக்குங்க. பைபிளில் கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தார்னு வருது. எனக்கு இது எப்போதும் ஒப்புடையதாயிருந்ததில்லை.. மனிதன் கடவுளைத் தன் சாயலில் படைத்துள்ளான்..

அடுத்ததை எதிர்பார்க்கிறேன்

')) said...

செந்தில் குமரன்,

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதினாலும், இந்த இடுகையும் தொய்வில்லாமல் இருக்கிறது.

பாராட்டுக்கள்.

அடிக்கடி எழுதுங்கள்.

said...

மனிதனில் இருந்து பரிணாமம் அடைய நினைக்கிற மனிதனின் பரிணாமம் கடவுள்.(மெய்ஞானம்)(சித்தி)

மனிதனாக இருந்து கொண்டு பரிணாமத்தை உருவாக்க நினைக்கிற மனிதனின் உருவாக்கம் ரோபோ(nauimann probe)(விஞ்ஞானம்)(புத்தி)

மனிதனாகவே இருந்து கொள்ள நினைக்கும் மனிதனின் அகங்காரம்

இவை மூன்றாக உருவாக காரணமாக உள்ள மனிதனின் மனம் எனும் சித்தி,புத்தி , அஹங்காரம்

')) said...

நீங்கள் பெருவெடிப்பை நம்புகிறவர்தானே?

அந்த கட்டமைப்பின் நீட்சியாக சிந்தனைகள் செய்வதும் கோட்பாடுகளை உருவாக்குவதும் முற்றிலும் தவறென்று கூற முடியாது அல்லவா? அவை தவறாக போக முடியாது என்றும் கூற முடியாது அல்லவா?