Saturday, October 07, 2006

மரண தண்டனை சிந்தனைகள்

காலையில் வந்து தமிழ் மணத்தை திறந்து பார்த்தால் ஒரே மரண தண்டனை பற்றிய செய்திகளா இருந்தது. செல்வன் ஆவேசமா தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். நல்லடியார் மதம் சார்ந்து கருத்துக்களை சொல்லி இருந்தார். உஷா அவர்கள் ஒரு விதமாக தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். குழலி தன் கருத்துக்களை குற்றவாளிகள் பார்வையில் இருந்து பார்க்கற மாதிரி சொல்லி இருந்தார். முதலில் என் கருத்தை பின்னூட்டமா வெளியிடலாம் என்றுதான் எண்ணி இருந்தேன் அப்புறம் தான் தனியா வெளியிடுவோம் என்று தனிப் பதிவாக போட்டிருக்கிறேன்.

முதலில் தண்டனை என்ற இந்த பழக்கம் எப்படி வந்திருக்கும் சமூகத்தில் வாழும் மனிதர்கள் தங்களுக்கு இடையே வாழ வேண்டும் என்றால் இது இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று வரைமுறைகளை வகுத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த வரையறைகள் மீறப் படும் சமயம் மீறுபவர்கள் தண்டனைக்கு உரியவர்களாவர்கள் என்று சட்டம் அமைந்திருக்க வேண்டும்.

இந்த சமூகத்தில் ஒருவன் இருக்கிறான். அவன் பசியால் திருடி விட்டான் என்று வைத்துக் கொள்வோம். மேலும் அவன் திருடும் முன் தன்னால் இயன்ற வரை பசியை தணித்துக் கொள்ள சமூகம் வரையுறுத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து முயற்சிக்கிறான என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவனால் இயலவில்லை. கடைசியாக பிச்சை கேட்கிறான். ஆனால் சமூகம் அவனுக்கு பிச்சை கூட கொடுக்கவில்லை. அவனை விரட்டி விட்டு மிச்ச சாப்பாட்டை சாக்கடையில் கொட்டி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

சமூகம் மிகக் கொடுமையான தண்டனைகளுக்கு மரணம் என்பதை தண்டனையாக வைத்திருக்கிறது.

பசி எடுத்தவன் திருடும் சமயம் ஒருவனை கொலை செய்து விடுகிறான். கொலை செய்து விட்ட அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

பசி எடுத்தவன் ஒரு கொலை செய்து கொஞ்ச காலம் பசியாற்றி விடுகிறான் கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பசி எடுக்க இன்னொரு கொலை செய்து விடுகிறான். இப்பொழுது அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

இந்த குற்றங்களை பசித்தவன் புரிந்தானே அதில் சமூகத்தின் பங்கு இருக்கிறதா?

சரி ஔஔஔஅப்சலை தூக்கில் போட வேண்டுமா என்றால் கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் என்றுதான் சொல்லுவேன்.

ஆனால் அவனை தூக்கில் இடப் பட வேண்டுமா என்ற கேள்வி எழும் சமயம் இதில் இந்த சமூகத்தின் தவறும் இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

survival to the fittest இதுதான் இன்று உலகில் எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் தாரக மந்திரம்.

மனிதன் மட்டும் அல்ல எல்லா உயிரினங்களும் இதற்காகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

மரண தண்டனை கொடுக்கப் படும் ஒவ்வொருவருக்கும் நான் சார்ந்திருக்கும் சமூகம் அந்த தண்டனைக்கு காரணியாக எதோ ஒரு வகையில் இருக்கிறது என்ற எண்ணம் என் மனதில் வந்தால் எனக்கு கொஞ்சம் சோகமும் வருகிறது.

அதற்காக சமூகத்தில் உள்ள அனைவரும் சோகம் கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் நமக்கும் கொஞ்சமாவது நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திடம் அக்கறை இருக்க வேண்டும்.

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக எனக்கு எந்த வித மகிழ்ச்சியும் இல்லை.

0 comments: