Friday, October 07, 2005

யோசித்து பார்க்கிறேன்
காதல் என்னவென்று
மனதுக்குள் ஒரு குழப்பம்

சட்டென

வானில் நிலவு தோன்ற
மேகமூட்டம் விழகுவது போல

மனதில் அவள் முகம் தோன்ற
பனித்திரை போல குழப்பம் கறைகிறது

விடை கிடைக்கிறது

மனது சஞ்சலத்தில் தவிக்கும் சமயம்
அவள் முகம் தோன்றி கிடைக்குமே
அமைதி அதுதான் காதல்

மனம் அமைதியில் ஆழும் சமயம்
அவள் நினைவு தோன்றி கிடைக்குமே
மகிழ்ச்சி அதுதான் காதல்

மனம் குழப்பத்தில் தடுமாறும் சமயம்
அவள் குரல் மனதில் ஒலிக்க கிடைக்குமே
நம்பிக்கை அதுதான் காதல்

மனம் நம்பிக்கை இழக்கும் சமயம்
அவள் பெயரை உதடு தன்னிச்சையாக உச்சரிக்க கிடைக்குமே
உற்சாகம் அதுதான் காதல்

மனம் உற்சாகம் அடையும் நேரம்
அவள் வார்த்தை மனதில் தோன்ற கிடைக்குமே
உதட்டோரசிரிப்பு அதுதான் காதல்

மரணம் வரும் வரை உணர்வுகள் உண்டெனில்
உணர்வு உள்ள வரை இருக்கும் காதல்.

0 comments: